திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2242 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2242இரண்டாம் திருவந்தாதி || கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் – வடிவே அன்று – அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது – நின்றதோர் பாதம் வடிவேயோ-அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் என்கிறது கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்தர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் – 61
நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள் சென்றளந்த தென்பர் திசையெல்லாம், – அன்று கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப் பிரமாணித் தார்பெற்ற பேறு.
பதவுரை Show / Hide
அன்று கருமாணி ஆய், Anru Karumaanai Aay - முன்பொரு காலத்திலே கரியகோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த, Iranda - (மாவலிபக்கல் மூவடிமண்) யாசித்த
கள்வனே, Kalvaney - க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம், Ninradhu Oor Paatham - (பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம், Nilam - பூமண்டலத்தை
புதைப்ப, Puthaippa - ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள், Neenda Thol - விம்ம வளர்ந்த திருத்தோளானது
திசை எல்லாம் சென்று, Thisai Ellam Sendru - திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர், Alandhadhu Enbar - (மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு, Unnai Piramaanikkaar Petra Peru - உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்