| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2242 | இரண்டாம் திருவந்தாதி || கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் – வடிவே அன்று – அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது – நின்றதோர் பாதம் வடிவேயோ-அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் என்கிறது கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்தர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் – 61 | நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள் சென்றளந்த தென்பர் திசையெல்லாம், – அன்று கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப் பிரமாணித் தார்பெற்ற பேறு. | அன்று கருமாணி ஆய், Anru Karumaanai Aay - முன்பொரு காலத்திலே கரியகோலப் பிரமசாரியாய்ச் சென்று இரந்த, Iranda - (மாவலிபக்கல் மூவடிமண்) யாசித்த கள்வனே, Kalvaney - க்ருத்ரிமனான பெருமானே! நின்றது ஓர் பாதம், Ninradhu Oor Paatham - (பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது நிலம், Nilam - பூமண்டலத்தை புதைப்ப, Puthaippa - ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு) நீண்ட தோள், Neenda Thol - விம்ம வளர்ந்த திருத்தோளானது திசை எல்லாம் சென்று, Thisai Ellam Sendru - திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து அளந்தது என்பர், Alandhadhu Enbar - (மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது) உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு, Unnai Piramaanikkaar Petra Peru - உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும் |