| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2243 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனாய் இருந்துள்ள அவனை அனுசந்தித்து அவனே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி – என் அபேஷிதத்தைத் தருவானாகக் கொண்டு அவனையே பற்றினேன் -என்கிறார் – ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான எருதுகளைப் போக்கி அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் -என்கிறது- ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு பிரதிபந்தகமான–எருதுகளைப் போக்கி-அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே- நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் என்கிறது – இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதத்தையும் தருவான் என்று அவனைப் பற்றினேன் என்கிறார் – 62 | பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால், மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின் பெருத்தெருத் தம் கோடொசியப் பெண்நசையின் பின்போய், எருத்திருந்த நல்லாயர் ஏறு. | பெண் நசையின் பின் போய், Pen Nasaiyin Pin Poi - நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு, ஏறின், Erin - விருஷபங்களினுடைய பெருத்த எருத்தம், Perutha Erutham - பெருத்த முசுப்புகளும் கோடு, Kodu - கொம்புகளும் ஓசிய, Oosiya - முறியும்படியாக எருத்து, Eruthu - (அந்த ரிஷபங்களின்) கழுத்தை இறுத்த, Irutha - முறித்த நல் ஆயர் ஏறு, Nal Aayar Eru - விலக்ஷணனான கோபாலகிருஷ்ணன் மாறு, Maaru - (நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன். என்று சொல்லி, Endru Solli - என்றெண்ணி வணங்கினேன், Vananginena - அவனை ஆச்ரயித்தேன் முன், Mun - இதற்குமுன்பு பேறு ஒன்றும் அறியேன், Peru Ondrum Ariyena - இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன் பேதைமையால், Pedaimaiyala - அப்படி அறியாதிருந்ததனால் பெற்று அறியேன், Petru Ariyena - அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன். |