Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2243 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2243இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனாய் இருந்துள்ள அவனை அனுசந்தித்து அவனே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி – என் அபேஷிதத்தைத் தருவானாகக் கொண்டு அவனையே பற்றினேன் -என்கிறார் – ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான எருதுகளைப் போக்கி அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் -என்கிறது- ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு பிரதிபந்தகமான–எருதுகளைப் போக்கி-அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே- நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் என்கிறது – இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதத்தையும் தருவான் என்று அவனைப் பற்றினேன் என்கிறார் – 62
பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,
மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின்
பெருத்தெருத் தம் கோடொசியப் பெண்நசையின் பின்போய்,
எருத்திருந்த நல்லாயர் ஏறு.
பெண் நசையின் பின் போய், Pen Nasaiyin Pin Poi - நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின், Erin - விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம், Perutha Erutham - பெருத்த முசுப்புகளும்
கோடு, Kodu - கொம்புகளும்
ஓசிய, Oosiya - முறியும்படியாக
எருத்து, Eruthu - (அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த, Irutha - முறித்த
நல் ஆயர் ஏறு, Nal Aayar Eru - விலக்ஷணனான கோபாலகிருஷ்ணன்
மாறு, Maaru - (நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி, Endru Solli - என்றெண்ணி
வணங்கினேன், Vananginena - அவனை ஆச்ரயித்தேன்
முன், Mun - இதற்குமுன்பு
பேறு ஒன்றும் அறியேன், Peru Ondrum Ariyena - இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால், Pedaimaiyala - அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன், Petru Ariyena - அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.