திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2243 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2243இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனாய் இருந்துள்ள அவனை அனுசந்தித்து அவனே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி – என் அபேஷிதத்தைத் தருவானாகக் கொண்டு அவனையே பற்றினேன் -என்கிறார் – ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான எருதுகளைப் போக்கி அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் -என்கிறது- ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு பிரதிபந்தகமான–எருதுகளைப் போக்கி-அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே- நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் என்கிறது – இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதத்தையும் தருவான் என்று அவனைப் பற்றினேன் என்கிறார் – 62
பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால், மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின் பெருத்தெருத் தம் கோடொசியப் பெண்நசையின் பின்போய், எருத்திருந்த நல்லாயர் ஏறு.
பதவுரை Show / Hide
பெண் நசையின் பின் போய், Pen Nasaiyin Pin Poi - நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின், Erin - விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம், Perutha Erutham - பெருத்த முசுப்புகளும்
கோடு, Kodu - கொம்புகளும்
ஓசிய, Oosiya - முறியும்படியாக
எருத்து, Eruthu - (அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த, Irutha - முறித்த
நல் ஆயர் ஏறு, Nal Aayar Eru - விலக்ஷணனான கோபாலகிருஷ்ணன்
மாறு, Maaru - (நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி, Endru Solli - என்றெண்ணி
வணங்கினேன், Vananginena - அவனை ஆச்ரயித்தேன்
முன், Mun - இதற்குமுன்பு
பேறு ஒன்றும் அறியேன், Peru Ondrum Ariyena - இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால், Pedaimaiyala - அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன், Petru Ariyena - அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.