Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2244 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2244இரண்டாம் திருவந்தாதி || அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் -அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறது ஆபத்து ஒரு தலையானால் -ஸ்ரீ பிராட்டிமார்களோடு -அபிமானிகளோடு வாசியறத் தானே போக்கும் என்கிறார் – இத்தால் ஸ்ரீ எம்பெருமானே -சர்வாதிகன் என்னும் இடமும் – அல்லாத ஈஸ்வரர்கள் பிறர்க்கும் தஞ்சம் அல்லர்கள் -தங்களுக்கும் தஞ்சம் அல்லர்கள் -என்னும் இடமும் சொல்லுகிறது- அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை-போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறார் – 63
ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து
ஏறேறிப் பட்ட இடுசாபம் – பாறேறி உண்டதலை
வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,
கண்டபொருள் சொல்லின் கதை.
ஏறு ஏழும், Eru Ezhum - ரிஷபங்களேழையும்
வென்று, Vendru - ஜயித்து
அடர்த்த, Adarttha - தொலைந்த
எந்தை, Endhai - ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறிபட்ட, Eri Uruvaththu Eru Eri Patt - நெருப்புப்போன்ற உருவத்தையுடையவனும் வருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
வீடு சாபம், Veedu Saapam - எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலைவாய் நிறைய, Paaru Eri Unda Thalaivai Niraiya - பருந்துக்கள் ஏறியிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு, Kodu - குவிந்த
அம் கை, Am Kai - அழகிய திருக்கையாலே
ஒண் குருதி, On Kuruthi - அழகிய ரத்தத்தாலே
கண்ட பொருள், Kanda Porul - அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில், Sollil - சொல்லத்தொடங்கினால்
கதை, Kathai - பெரியதொரு பாரதகதையாக முடியும்.