| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2245 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கூடக் கார்யம் செய்யக் கடவ நீ -உன்னால் அல்லது செல்லாத நான் உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் -என்கிறார் – இதிகாச புராணங்கள் உடைய ஹிருதயம் இருந்தபடி-அறிந்து சொன்னவற்றில் நிர்ணீதமான வர்த்தம்-ஆஸ்ரித பவ்யனானவனுடைய-திரு நாமத்தை சொல்லுகை -என்கிறது இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கார்யம் செய்யக் கடவ நீ உன்னால் அல்லது செல்லாத நான் உன் திரு நாமங்களை சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் – 64 | கதையும் பெரும்பொருளும் கண்ணாநின் பேரே, இதய மிருந்தவையே ஏத்தில், – கதையும் திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப், பருமொழியால் காணப் பணி. | கண்ணா, Kannaa - கண்ணபிரானே! கதையும், Kathaiyum - இதிஹாஸ புராணங்களும் பெரு பொருளும், Peru Porulum - அவற்றின் சிறந்த அர்த்தங்களும் இதயம், Idhayam - அவற்றின் தாற்பரியமும் இருந்த வையே, Irundha Vaiye - உள்ளது உள்ளபடியே ஏலத்தில், Elathil - அறிந்து துதித்தால் நின் பேரே, Nin Pere - (அவையெல்லாம்) உன்னுடைய திருநாமங்களேயாம் கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே, Kathaiyin Thirumozhi Aayinindra Thirumaale - இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே! உன்னை, Unnai - உன்னை பருமொழியால் காண, Parumozhiyal Kaan - பரிபூர்ண சப்தங்களாலேகண்டு அது பவிக்கும்படி பணி, Pani - திருவுள்ளம் பற்றிவேணும் |