Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2245 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2245இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கூடக் கார்யம் செய்யக் கடவ நீ -உன்னால் அல்லது செல்லாத நான் உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் -என்கிறார் – இதிகாச புராணங்கள் உடைய ஹிருதயம் இருந்தபடி-அறிந்து சொன்னவற்றில் நிர்ணீதமான வர்த்தம்-ஆஸ்ரித பவ்யனானவனுடைய-திரு நாமத்தை சொல்லுகை -என்கிறது இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கார்யம் செய்யக் கடவ நீ உன்னால் அல்லது செல்லாத நான் உன் திரு நாமங்களை சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் – 64
கதையும் பெரும்பொருளும் கண்ணாநின் பேரே,
இதய மிருந்தவையே ஏத்தில், – கதையும்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,
பருமொழியால் காணப் பணி.
கண்ணா, Kannaa - கண்ணபிரானே!
கதையும், Kathaiyum - இதிஹாஸ புராணங்களும்
பெரு பொருளும், Peru Porulum - அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம், Idhayam - அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே, Irundha Vaiye - உள்ளது உள்ளபடியே
ஏலத்தில், Elathil - அறிந்து துதித்தால்
நின் பேரே, Nin Pere - (அவையெல்லாம்) உன்னுடைய திருநாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே, Kathaiyin Thirumozhi Aayinindra Thirumaale - இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை, Unnai - உன்னை
பருமொழியால் காண, Parumozhiyal Kaan - பரிபூர்ண சப்தங்களாலேகண்டு அது பவிக்கும்படி
பணி, Pani - திருவுள்ளம் பற்றிவேணும்