| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2246 | இரண்டாம் திருவந்தாதி || இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன – அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் -பெற்ற அம்சம் உன்பக்கல் ருசி -என்கிறார் – ஸ்ரீ பெருமாள் புக்கு அருளினால் பின்னும் முன்னும் நின்று வைத்த அனைத்தையும் பின்பும் பிறகுவாளியையும் கண்டு யேத்துகையில் துணிந்தேன் இப்போது உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீரே காணும் -என்ன அந்த லாபத்தை அனுசந்தித்துத் தத் அனுரூபமாகப் பரிமாறுகிறார் – 65 | பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், – துணிந்தேன் புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே இருந்தேத்தி வாழும் இது. | திருமெனி, Thirumeniy - உனது திருமேனியை பணிந்தேன், Panindhen - ஸேவித்தேன் உன் சே அடி மேல், Un Che Adi Mel - உனது செவ்விய திருவடிகளின் மேல் பை கமலம், Pai Kamalam - அழகிய தாமரை மலர்களை அன்பு ஆய், Anbu Aay - அன்புகொண்டு கையால் அணிந்தேன், Kaiyal Anindhen - கையால் ஸமர்ப்பித்தேன் உன்னை, Unnai - உன்னை புரிந்து ஏத்தி, Purindhu Aethi - விரும்பித் துதித்து புகல் இடம் பார்த்து, Pugal Idam Paarthu - பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி ஆங்கே இருந்து ஏத்திவாழும் இது துணிந்தேன், Aange Irundhu Aethivaazhum Ithu Thunindhen - அவ்விடத்திலேயே இருந்துகொண்டு மங்களாசாஸநம் பண்ணி வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன். |