Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2246 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2246இரண்டாம் திருவந்தாதி || இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன – அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் -பெற்ற அம்சம் உன்பக்கல் ருசி -என்கிறார் – ஸ்ரீ பெருமாள் புக்கு அருளினால் பின்னும் முன்னும் நின்று வைத்த அனைத்தையும் பின்பும் பிறகுவாளியையும் கண்டு யேத்துகையில் துணிந்தேன் இப்போது உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீரே காணும் -என்ன அந்த லாபத்தை அனுசந்தித்துத் தத் அனுரூபமாகப் பரிமாறுகிறார் – 65
பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், – துணிந்தேன்
புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே
இருந்தேத்தி வாழும் இது.
திருமெனி, Thirumeniy - உனது திருமேனியை
பணிந்தேன், Panindhen - ஸேவித்தேன்
உன் சே அடி மேல், Un Che Adi Mel - உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம், Pai Kamalam - அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய், Anbu Aay - அன்புகொண்டு
கையால் அணிந்தேன், Kaiyal Anindhen - கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை, Unnai - உன்னை
புரிந்து ஏத்தி, Purindhu Aethi - விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து, Pugal Idam Paarthu - பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி
ஆங்கே இருந்து ஏத்திவாழும் இது துணிந்தேன், Aange Irundhu Aethivaazhum Ithu Thunindhen - அவ்விடத்திலேயே இருந்துகொண்டு மங்களாசாஸநம் பண்ணி வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.