Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2247 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2247இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தால் பெற்ற அளவு அமையும் -இதர விஷய ப்ராவண்யத்தால் வரும் அனர்த்தத்தை அனுசந்தித்து -இதிலே ருசி யுண்டாகாது இருக்கும் அத்தனையே வேண்டுவது என்கிறார் – ப்ராப்திக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் அடி -சம்சார தோஷ தர்சனத்தைப் பண்ணுகை- ஏத்துகையிலே துணிகையே யன்று- பிராப்திக்கும்–பிரதிபந்தக நிவ்ருதிக்கும்–அடி -சம்சார தோஷ தர்சனம் பண்ணுகை- ஏத்துகையில் துணிகை அன்று – 66
இதுகண்டாய் நன்னெஞ்சே! இப்பிறவி யாவது,
இதுகண்டா யெல்லாம்நா முற்றது, – இதுகண்டாய்
நாரணன்பே ரோதி நகரத் தருகணையா,
காரணமும் வல்லையேல் காண்.
நல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே!
இப்பிறவி ஆவது இது கண்டாய், Ippiravi Aavathu Ithu Kandaai - இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப்பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய், Naam Utrathu Ellam Ithu Kandaai - (இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண்
நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர், Per - திருநாமங்களை
ஓதி, Othi - ஸங்கீர்த்தனம் பண்ணி
நாகத்து, Naagathu - ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு, Arugu - ஸமீபத்திலும்
அணையா காரணமும், Anaiyaa Kaaranamm - நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய், Idhu Kandaai - இந்த ஸம்ஸாரத்தின் தோஷமேகாண்;
வல்லை ஏல், Vallai Eel - நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண், Kaan - எல்லாம் தெரிந்து கொள்.