| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2247 | இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தால் பெற்ற அளவு அமையும் -இதர விஷய ப்ராவண்யத்தால் வரும் அனர்த்தத்தை அனுசந்தித்து -இதிலே ருசி யுண்டாகாது இருக்கும் அத்தனையே வேண்டுவது என்கிறார் – ப்ராப்திக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் அடி -சம்சார தோஷ தர்சனத்தைப் பண்ணுகை- ஏத்துகையிலே துணிகையே யன்று- பிராப்திக்கும்–பிரதிபந்தக நிவ்ருதிக்கும்–அடி -சம்சார தோஷ தர்சனம் பண்ணுகை- ஏத்துகையில் துணிகை அன்று – 66 | இதுகண்டாய் நன்னெஞ்சே! இப்பிறவி யாவது, இதுகண்டா யெல்லாம்நா முற்றது, – இதுகண்டாய் நாரணன்பே ரோதி நகரத் தருகணையா, காரணமும் வல்லையேல் காண். | நல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே! இப்பிறவி ஆவது இது கண்டாய், Ippiravi Aavathu Ithu Kandaai - இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப்பட்டது காண். நாம் உற்றது எல்லாம் இது கண்டாய், Naam Utrathu Ellam Ithu Kandaai - (இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண் நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணனுடைய பேர், Per - திருநாமங்களை ஓதி, Othi - ஸங்கீர்த்தனம் பண்ணி நாகத்து, Naagathu - ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய அருகு, Arugu - ஸமீபத்திலும் அணையா காரணமும், Anaiyaa Kaaranamm - நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும் இது கண்டாய், Idhu Kandaai - இந்த ஸம்ஸாரத்தின் தோஷமேகாண்; வல்லை ஏல், Vallai Eel - நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில் காண், Kaan - எல்லாம் தெரிந்து கொள். |