Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2248 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2248இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானுடைய அழகிய திரு மேனியைக் காணப் பெற்றேன் – ஸ்ரீ ஆழ்வார்கள் பஷத்தால் குணாதிகள் ஆநுஷங்கிதம்-தன்னடையே வருவது- அனுபவிக்கக் கடவதான புண்ய பாபங்களைப் போக்கி பின்பு வாசனையும் போக்குமவனுடைய மிடுக்கைக் கண்டேன் வாசனையைப் போக்குகைக்கு வலி கண்டேன் என்றுமாம்- இவர் திரு உள்ளத்தைக் குறித்து -சம்சார தோஷத்தைக் காண் -என்ற அநந்தரம் -அவன் நிர்ஹேதுகமாக தன்னைக் கொண்டு வந்து காட்ட -அதிலே தாம் கண்ட அம்சத்தை அருளிச் செய்கிறார் – 67
கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, – கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.
யான், Yaan - அடியேன்
கனவில், Kanavil - ஸவப்நம்போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி, Thirumeeni - திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன்
ஆங்கு, Aangu - அப்போது
அவன் கை, Avan Kai - அவனது திருக்கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன், Kanalum Sudar Aazhi Kandeen - ஜ்வலிக்கிற சுடர்மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும், Uru Nooi Vinai Irandum - மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து, Ottuviththu - தொலைத்திட்டு
பின்னும், Pinnum - பின்னையும்
மறு நோய் செறுவான், Maru Nooi Seruvaan - மறுகிளை கிளர்ந்து வரக்கூறிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி, Vali - மிடுக்கையும்
கண்டேன், Kandeen - காணப்பெற்றேன்.