திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2250 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2250இரண்டாம் திருவந்தாதி || அவன் பக்கல் தம்முடைய அபேஷிதம் பெற்றுப் போகிறார் தேவர்களேயோ- நாம் காண ஜகத்துக்கு ரஷகராய் ஜீவிக்கிற ராஜாக்களும் எல்லாம் ஜகத் காரண பூதனானவன் திருவடிகளை ஆஸ்ரயித்து அன்றோ தந்தாமுடைய பதங்கள் பெற்றுத் திரிகிறது என்கிறார்- ராஜாக்களும் அழகிய தாமரைப் பூவை திரு நாபியில் உடையவனானவனுடைய திருவடிகளிலே குளிர்ந்த தாமரைப் பூவை அணிந்த தமர்கள் இறே ஸ்வர்க்கத்தில் தேவர்கள் இவனைப் பற்றி தாங்கள் பிரயோஜனம் பெற்ற அளவன்றிக்கே -பூ லோகத்தில் ராஜாக்களும் இவனைப் பற்றியே தம் தாம் பதம் பெற்றுப் போகா நின்றார்கள் கிடீர் -என்கிறார் – 69
கோவாகி மாநிலம்காத்து,நங்கண்முகப்பே மாவேகிச் செல்கின்ற மன்னவரும் – பூவேகும் செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும், தண்கமல மேய்ந்தார் தமர்.
பதவுரை Show / Hide
கோ ஆகி, Ko Aagi - ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து, Maa Nilam Kaathu - பரந்த பூமண்டலத்தை அரசாட்சிபுரிந்து
நம் கண் முகப்பே, Nam Kan Mugappe - நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற, Maa Aegi Selkindra - குதிரையேறித்திரிகின்ற
மன்னவரும், Mannavarum - அரசர்களும்,
செம் கமலப்பூ மேவும், Sem Kamalappoo Mevum - செந்தாமரை மலர் பொருந்தியிருக்கப் பெற்ற
நாபியான், Naabiyan - திருநாபியையுடைய பெருமானுடைய
சே அடிக்கே, Sae Adikke - திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும், Ezha Pirappum - பலபல ஜன்மங்களிலே
தண் கமலம், Than Kamalam - அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார், Eyndhaar - ஸமர்ப்பித்தவர்களான
தமர், Thamar - பக்தர்களாவர்