| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2250 | இரண்டாம் திருவந்தாதி || அவன் பக்கல் தம்முடைய அபேஷிதம் பெற்றுப் போகிறார் தேவர்களேயோ- நாம் காண ஜகத்துக்கு ரஷகராய் ஜீவிக்கிற ராஜாக்களும் எல்லாம் ஜகத் காரண பூதனானவன் திருவடிகளை ஆஸ்ரயித்து அன்றோ தந்தாமுடைய பதங்கள் பெற்றுத் திரிகிறது என்கிறார்- ராஜாக்களும் அழகிய தாமரைப் பூவை திரு நாபியில் உடையவனானவனுடைய திருவடிகளிலே குளிர்ந்த தாமரைப் பூவை அணிந்த தமர்கள் இறே ஸ்வர்க்கத்தில் தேவர்கள் இவனைப் பற்றி தாங்கள் பிரயோஜனம் பெற்ற அளவன்றிக்கே -பூ லோகத்தில் ராஜாக்களும் இவனைப் பற்றியே தம் தாம் பதம் பெற்றுப் போகா நின்றார்கள் கிடீர் -என்கிறார் – 69 | கோவாகி மாநிலம்காத்து,நங்கண்முகப்பே மாவேகிச் செல்கின்ற மன்னவரும் – பூவேகும் செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும், தண்கமல மேய்ந்தார் தமர். | கோ ஆகி, Ko Aagi - ராஜாதி ராஜர்களாய் மா நிலம் காத்து, Maa Nilam Kaathu - பரந்த பூமண்டலத்தை அரசாட்சிபுரிந்து நம் கண் முகப்பே, Nam Kan Mugappe - நம் கண்ணெதிரே மா ஏகி செல்கின்ற, Maa Aegi Selkindra - குதிரையேறித்திரிகின்ற மன்னவரும், Mannavarum - அரசர்களும், செம் கமலப்பூ மேவும், Sem Kamalappoo Mevum - செந்தாமரை மலர் பொருந்தியிருக்கப் பெற்ற நாபியான், Naabiyan - திருநாபியையுடைய பெருமானுடைய சே அடிக்கே, Sae Adikke - திருவடிகளுக்கு ஏழ் பிறப்பும், Ezha Pirappum - பலபல ஜன்மங்களிலே தண் கமலம், Than Kamalam - அழகிய தாமரைப் பூக்களை ஏய்ந்தார், Eyndhaar - ஸமர்ப்பித்தவர்களான தமர், Thamar - பக்தர்களாவர் |