திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2252 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2252இரண்டாம் திருவந்தாதி || சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாய்ப் போந்து அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களை அனுசந்தித்து நித்ய சூரிகள் அஸ்தானே பய சங்கி களாய்க் கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லுகிறது – ஆக இப்படிப் பரிவர் இல்லாத இடங்களிலே வந்து சந்நிஹிதனானவன் – அங்கு அப்படிப் பரிவரோடே இருக்குமவன் கிடீர் என்கிறார் – கீழ் இவன் தான் உகந்தபடி சொல்லிற்று -இதில் இவனையே உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது – அவன் இங்கு வந்தாலும் அங்கு உள்ளாரே பரியும் அத்தனை -இங்குப் பரிவார் இல்லை -அது யார் அறியப் படுகிறார் என்கிறார் – சர்வ காலத்திலும் ஸூலபமான படியை அனுசந்தித்தார் கீழ் சர்வ தேசத்திலும் ஸூலபனான படியை அனுசந்திக்கிறார் இதில்- கீழ் இவன் உகந்த படி சொல்லிற்று-இவனை உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாகத் திரு உலகு அளந்து அருளின தசையில் அனுசந்தித்து நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கை பண்ணிப் படும் பாடு சொல்லுகிறார் – 71
இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான் றடங்கா ரொடுங்குவித்த தாழி, – விடங்காலும் தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான், பூவா ரடிநிமிர்ந்த போது.
பதவுரை Show / Hide
விடம் காலும், Vidam Kaalum - விஷத்தைக்கக்குகின்
தீ வாய், Thee Vaai - பயங்கரமான வாயையுடைய
அரவு, Aravu - திருவனத்தாழ்வானாகிய
அணை மேல், Anai Mel - சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல், Thonral - ஸர்வேச்வரன்
வலம்புரி, Valampuri - சங்கானது
இடங்கை, Idangai - இடத்திருக்கையில்
நின்று, Ninru - இருந்து டிகாண்டு
ஆர்ப்ப, Aarppa - முழங்க
ஆழி, Aazhi - திருவாழியானது
திசை, Thisai - எல்லாவிட“களையும்
அளப்பான், Alappaan - அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி, Poo Aar Adi - பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது, Nimirtta Podhu - உயரத்தூக்கியருளின காலத்து
எரி கான்று, Eri Kaandru - நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார், Adangaar - எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து, Odunguviddhu - வாய்மாளப் பண்ணிற்று