| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2252 | இரண்டாம் திருவந்தாதி || சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாய்ப் போந்து அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களை அனுசந்தித்து நித்ய சூரிகள் அஸ்தானே பய சங்கி களாய்க் கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லுகிறது – ஆக இப்படிப் பரிவர் இல்லாத இடங்களிலே வந்து சந்நிஹிதனானவன் – அங்கு அப்படிப் பரிவரோடே இருக்குமவன் கிடீர் என்கிறார் – கீழ் இவன் தான் உகந்தபடி சொல்லிற்று -இதில் இவனையே உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது – அவன் இங்கு வந்தாலும் அங்கு உள்ளாரே பரியும் அத்தனை -இங்குப் பரிவார் இல்லை -அது யார் அறியப் படுகிறார் என்கிறார் – சர்வ காலத்திலும் ஸூலபமான படியை அனுசந்தித்தார் கீழ் சர்வ தேசத்திலும் ஸூலபனான படியை அனுசந்திக்கிறார் இதில்- கீழ் இவன் உகந்த படி சொல்லிற்று-இவனை உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாகத் திரு உலகு அளந்து அருளின தசையில் அனுசந்தித்து நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கை பண்ணிப் படும் பாடு சொல்லுகிறார் – 71 | இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான் றடங்கா ரொடுங்குவித்த தாழி, – விடங்காலும் தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான், பூவா ரடிநிமிர்ந்த போது. | விடம் காலும், Vidam Kaalum - விஷத்தைக்கக்குகின் தீ வாய், Thee Vaai - பயங்கரமான வாயையுடைய அரவு, Aravu - திருவனத்தாழ்வானாகிய அணை மேல், Anai Mel - சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற) தோன்றல், Thonral - ஸர்வேச்வரன் வலம்புரி, Valampuri - சங்கானது இடங்கை, Idangai - இடத்திருக்கையில் நின்று, Ninru - இருந்து டிகாண்டு ஆர்ப்ப, Aarppa - முழங்க ஆழி, Aazhi - திருவாழியானது திசை, Thisai - எல்லாவிட“களையும் அளப்பான், Alappaan - அளந்து கொள்வதற்காக பூ ஆர் அடி, Poo Aar Adi - பூப்போன்ற திருவடியை நிமிர்த்த போது, Nimirtta Podhu - உயரத்தூக்கியருளின காலத்து எரி கான்று, Eri Kaandru - நெருப்பை உமிழா நின்று கொண்டு அடங்கார், Adangaar - எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை ஒடுங்குவித்து, Odunguviddhu - வாய்மாளப் பண்ணிற்று |