Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2253 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2253இரண்டாம் திருவந்தாதி || அளவுடையரான நித்ய ஸூரிகளும் கூட இப்படிப் படுகிற விஷயமான பின்பு எனக்குச் சென்று ஆஸ்ரயிக்கைக்கு யோக்யதை உண்டோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க- அது வேண்டா காண்-திர்யக்குகளும் கூட ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபன் காண் – ஆன பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் – ஸ்ரீ திருமலையில் திர்யக்குகள் ஆஸ்ரயிக்கும் படி சொல்லுகிறது- அளவுடையரான நித்ய ஸூரிகளும் இப்படி படுகிற விஷயத்தை -நமக்குச் சென்று ஆஸ்ரயிக்கப் போமோ -என்று பிற்காலிக்கிற திரு உள்ளத்தைக் குறித்து -திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனான பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் – 72
போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது
மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல,
அணிவேங் கடவன்பே ராய்ந்து.
வானரங்கள், Vaanarangkal - குரங்குகளானவை
போது அறிந்து, Podhu Arindhu - விடியற்கால முணர்ந்து (எழுந்துபோய்)
பூ சுனை புக்கு, Poo Sunai Pukku - புஷ்பித்த நீர்நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும், Aethum - தோத்திரஞ் செய்யாநின்றன
உள்ளம், Ullam - மனமே!
போது, Podhu - (நீயும் அப்படிசெய்ய) வா
அணி வெங்கடவன், Ani Vengadavan - அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர், Per - திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த, Aangu Alarntha - அப்போதே மலர்ந்த
போது, Podhu - புஷ்பங்களை
அரிந்து கொண்டு, Arindhu Kondo - பறித்துக்கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து, Aayndhu - அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல, Vengadan Malar Adikke Sella - அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும், Pothum - புஷ்பங்களையும்
அணி, Ani - ஸமர்ப்பிக்கக்கடவர்