Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2254 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2254இரண்டாம் திருவந்தாதி || அவன் இப்படி சர்வ சமாஸ்ரயணீயனான நிலையை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக வ்யவசிதரான படியை அருளிச் செய்கிறார் – அவன் பிரதிபந்தகம் போக்க-நான் அடிமை செய்தேன் என்கிறார் சர்வ ஸமாச்ரயணீயன் ஆனவன் நிலையை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே தாம் நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக அத்யாவசித்த படியை அருளிச் செய்கிறார் – 73
ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,
வாய்ந்த மலர்தூவி வைகலும், – ஏய்ந்த
பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்
இறைக்காட் படத்துணிந்த யான்.
பிறை ஏய்ந்த கோடு, Pirai Eyndha Kodu - சந்திரகலை போன்ற தந்தரத்தையும்
செம் கண், Sem Kan - சிவந்த கண்களையுமுடைய
கரி, Kari - கஜேந்திராழ்வானை
விடுத்த, Vidutha - முதலைவாயில் நினறு விடுவித்தருளின
பெம்மான், Pemmaan - ஸர்வேச்வரனான
இறைக்கு, Iraikku - ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட, Aalpad - அடிமை செய்ய
துணிந்தயான், Thunindhyaan - உறுதிகொண்டயேன்
ஆதி நடு அந்திவாய் கைகலும், Aadhi Nadu Andhivai Kaikalam - காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர், Vaindha Malar - கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர், Aayiram Per - அமிரத் திரநாராணகளையும்
உய்ந்து உரைப்பான், Uyndhu Uraippaan - ஆராய்ந்து