Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2255 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2255இரண்டாம் திருவந்தாதி || இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி பாடும்படியான ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே -என்கிறார் நம் ஆழ்வார் வானவர் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் 4-5-9- என்றாப் போலே யாய்த்து இவர்க்கும் இது – விலஷணம் ஆகிற தமிழ் ஆகிற மாலையை சேர்ந்த திருவடிகளிலே சொன்னேன் – ஆகையால் –பெரும் தமிழன்— பெரிய தமிழன் / –பெரிது நல்லேன்-மிகவும் நல்லேன்- இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி படும்படியான ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே என்கிறார் – 74
யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான், – யானே
இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,
பெருந்தமிழன் நல்லேன் பெரிது.
எம்பெருமான், Emperumaan - ஸர்வஸவாமிந்!
ஏழ் பிறப்பும், Ezha Pirappum - எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும், Eppozhudum - எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன், Thavam Seithen - தவம் புரிந்தவன்
யானே, Yaaney - நானே
தவம் உடையேன்யானே, Thavam Udayenyaney - அந்தத் தபஸ்ஸின் பலனைப்பெற்றவனும் யானே
இரு தமிழ் நல்மாலை, Iru Tamil Nalmalaik - சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல்மாலைகளை
இணை அடிக்கே, Inai Adikke - (உனது) உபயபாதங்களிலே
சொன்னேன், Sonnene - விஜ்ஞாபித்தவனாய்
பெரு தமிழன், Peru Tamizan - பெரிய தமிழ்க்கலையில் வல்லவனாய்
பெரிது, Peridhu - மிகவும்
நல்லேன், Nalleen - உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே, Yaaney - அடியேனே