| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2255 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி பாடும்படியான ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே -என்கிறார் நம் ஆழ்வார் வானவர் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் 4-5-9- என்றாப் போலே யாய்த்து இவர்க்கும் இது – விலஷணம் ஆகிற தமிழ் ஆகிற மாலையை சேர்ந்த திருவடிகளிலே சொன்னேன் – ஆகையால் –பெரும் தமிழன்— பெரிய தமிழன் / –பெரிது நல்லேன்-மிகவும் நல்லேன்- இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி படும்படியான ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே என்கிறார் – 74 | யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும், யானே தவமுடையேன் எம்பெருமான், – யானே இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது. | எம்பெருமான், Emperumaan - ஸர்வஸவாமிந்! ஏழ் பிறப்பும், Ezha Pirappum - எல்லா ஜன்மங்களிலும் எப்பொழுதும், Eppozhudum - எல்லா அவஸ்தைகளிலும் தவம் செய்தேன், Thavam Seithen - தவம் புரிந்தவன் யானே, Yaaney - நானே தவம் உடையேன்யானே, Thavam Udayenyaney - அந்தத் தபஸ்ஸின் பலனைப்பெற்றவனும் யானே இரு தமிழ் நல்மாலை, Iru Tamil Nalmalaik - சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல்மாலைகளை இணை அடிக்கே, Inai Adikke - (உனது) உபயபாதங்களிலே சொன்னேன், Sonnene - விஜ்ஞாபித்தவனாய் பெரு தமிழன், Peru Tamizan - பெரிய தமிழ்க்கலையில் வல்லவனாய் பெரிது, Peridhu - மிகவும் நல்லேன், Nalleen - உனக்கு நல்லவனாயிருப்பவன் யானே, Yaaney - அடியேனே |