| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2256 | இரண்டாம் திருவந்தாதி || நான் போர நல்லேன் என்றாரே -ஆகில் நீர் ஒரு கவி சொல்லிக் காணீர் என்ன -அப்போது சொன்ன கவி தான் இருக்கிறபடி – ஸ்ரீ வால்மீகி பகவானுடைய கவி பாட்டுக்கு உள்ளாக ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் நேர் பட்டாப் போலே யாயத்து – இவருடைய கவி பாட்டுக்கு உள்ளீடாக ஸ்ரீ திருமலை யிடையாட்டம் நேர் பட்டபடி- பெரிய தமிழன் மிகவும் நல்லேன் என்று சொன்னீர்-ஒரு கவி சொல்லிக் காணும் என்ன-சொல்லுகிறார் பெருகு நல்லன் -என்று கொண்டாடிச் சொன்னீர் -இப்படிப் பெரு மதிப்பராய் இருக்கிற நீர் தாம் ஒரு கவி சொல்லிக் காணீர் -என்ன -அப்போது விண்ணப்பம் செய்த கவி தன்னைச் சொல்லுகிறார் – 75 | பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று , இருக ணிளமூங்கில் வாங்கி, – அருகிருந்த தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர், வான்கலந்த வண்ணன் வரை. | பெருகும், Perugum - பெருகுகின்ற மதம், Matham - மதநீரையுடைத்தான் வேழம், Vezham - யானையானது மா பிடிக்கு முன் நின்று, Maa Pidikku Mun Nindru - (தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று இரு கண் இளமூங்கில் வாங்கி, Iru Kan Ilamoonkil Vaangi - இரண்டு கணுக்களையுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப்பிடுங்கி அருகு இருநீத தேன் கலந்து, Arugu Iruneetha Then Kalandu - (அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து நீட்டும், Neettum - (பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற திருவேங்கடம் கண்டீர், Thiruveengadam Kandeer - திருமலையன்றோ வான் கலந்த வண்ணன் வரை, Vaan Kalandha Vannaan Varai - மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தான மான) பர்வதம். |