Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2256 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2256இரண்டாம் திருவந்தாதி || நான் போர நல்லேன் என்றாரே -ஆகில் நீர் ஒரு கவி சொல்லிக் காணீர் என்ன -அப்போது சொன்ன கவி தான் இருக்கிறபடி – ஸ்ரீ வால்மீகி பகவானுடைய கவி பாட்டுக்கு உள்ளாக ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் நேர் பட்டாப் போலே யாயத்து – இவருடைய கவி பாட்டுக்கு உள்ளீடாக ஸ்ரீ திருமலை யிடையாட்டம் நேர் பட்டபடி- பெரிய தமிழன் மிகவும் நல்லேன் என்று சொன்னீர்-ஒரு கவி சொல்லிக் காணும் என்ன-சொல்லுகிறார் பெருகு நல்லன் -என்று கொண்டாடிச் சொன்னீர் -இப்படிப் பெரு மதிப்பராய் இருக்கிற நீர் தாம் ஒரு கவி சொல்லிக் காணீர் -என்ன -அப்போது விண்ணப்பம் செய்த கவி தன்னைச் சொல்லுகிறார் – 75
பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று ,
இருக ணிளமூங்கில் வாங்கி, – அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,
வான்கலந்த வண்ணன் வரை.
பெருகும், Perugum - பெருகுகின்ற
மதம், Matham - மதநீரையுடைத்தான்
வேழம், Vezham - யானையானது
மா பிடிக்கு முன் நின்று, Maa Pidikku Mun Nindru - (தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இளமூங்கில் வாங்கி, Iru Kan Ilamoonkil Vaangi - இரண்டு கணுக்களையுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப்பிடுங்கி
அருகு இருநீத தேன் கலந்து, Arugu Iruneetha Then Kalandu - (அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும், Neettum - (பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர், Thiruveengadam Kandeer - திருமலையன்றோ
வான் கலந்த வண்ணன் வரை, Vaan Kalandha Vannaan Varai - மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தான மான) பர்வதம்.