Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2257 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2257இரண்டாம் திருவந்தாதி || கவி பாட்டு இனிதானாப் போலே அங்குத்தைக்கு ஈடான சமாராதன உபகரணங்களைச் சமைத்துக் கொண்டு இப்படி சந்நிஹிதனாய் -வகுத்தவனானவன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார்- இப்படி சந்நிஹிதன் ஆனவனை–ஆஸ்ரயிக்கை உறும் என்கிறது- இப்படி வாசகமாகக் கவி பாடி உகப்பித்த அளவின்றிக்கே -அடிமைக்கு ஈடான உப கரணங்களைத் தேடிக் கொண்டு வகுத்த சேஷியான அவன் திருவடிகளிலே அடிமை செய்வதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார் – 76
வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்,
விரைப் பொலிந்த வெண்மல் லிகையும் – நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே
ஓதிப் பணிவ தூறும்.
வரை சந்தனம் குழம்பும், Varai Chandhanam Kuzhambum - (மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும், Vaan Kalanum - சிறந்த ஆபரணங்களையும்
பட்டும், Pattum - பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த, Virai Polintha - பரிமளம் விஞ்சி யிருக்கப்பெற்ற
வெண் மல்லிகையும், Ven Malligaiyum - வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிரைத்துக் கொண்டு, Niraiththuk Kondo - சேரித்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன், Aadhikkan Nindra Arivan - ஸகலஜகத்காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே, Adi Inaiye - உபய பாதங்களையே
ஓதி, Othi - வாயாரத்துதித்து
பணிவது, Panivathu - தலையார வணங்குவது
உறும், Urum - ஸ்வரூபத்துக்குச் சேரும்.