Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2258 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2258இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆஸ்ரயணத்தை அடைவுபட அனுசந்தித்து இவர் தமக்கு அது ரசித்தவாறே -திரு உள்ளத்தைக் குறித்து அவன் லப்தனானால் பிறக்கும் அனுபவத்தில் காட்டிலும் சாதன தசையில் பிறக்கும் ரசமே அமையும் கிடாய் -என்கிறார்- ஆஸ்ரயணீய வஸ்து தன்னிலும் ஆஸ்ரயணயம் தானே உறும் இப்படி ஆஸ்ரயணத்திலே ஒருப்பட்டவர்-அது தமக்கு இனிதாய் இருக்கையாலே -அனுபவ தசையில் காட்டிலும் சாதன தசையில் பிறக்கும் ரஸமே அமையும் கிடாய் -நெஞ்சே -என்கிறார் 77
உறுங்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன்நற் பாதம்,
உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், – உறுங்கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்ஞா றெப்பொழுதும்,
சாற்றி யுரைத்தல் தவம்.
நல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே!
உத்தமன், Uththaman - புருஷோத்தமனுடைய
நல் பாதம், Nal Paatham - சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய், Urum Kandaai - நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால், Oon Kamalam Thannal - அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய், Urum Kandaai - நமக்கு உரியது காண்
சாத்தி, Saathi - (அத்தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி, Aethi - துதித்து
பணிந்து, Panindhu - நமஸ்கரித்து
அவன் பேர், Avan Per - அவனது ஸஹஸ்ர
ஈர் ஐந்நூறு, Eer Ainnuru - நாமங்களையும்
எப்பொழுதும், Eppozhudum - அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம், Thavam - தபஸ்ஸானது
உறுமு கண்டாய், Urum Kandaai - உரியது காண்.