| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2258 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆஸ்ரயணத்தை அடைவுபட அனுசந்தித்து இவர் தமக்கு அது ரசித்தவாறே -திரு உள்ளத்தைக் குறித்து அவன் லப்தனானால் பிறக்கும் அனுபவத்தில் காட்டிலும் சாதன தசையில் பிறக்கும் ரசமே அமையும் கிடாய் -என்கிறார்- ஆஸ்ரயணீய வஸ்து தன்னிலும் ஆஸ்ரயணயம் தானே உறும் இப்படி ஆஸ்ரயணத்திலே ஒருப்பட்டவர்-அது தமக்கு இனிதாய் இருக்கையாலே -அனுபவ தசையில் காட்டிலும் சாதன தசையில் பிறக்கும் ரஸமே அமையும் கிடாய் -நெஞ்சே -என்கிறார் 77 | உறுங்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன்நற் பாதம், உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், – உறுங்கண்டாய் ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்ஞா றெப்பொழுதும், சாற்றி யுரைத்தல் தவம். | நல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே! உத்தமன், Uththaman - புருஷோத்தமனுடைய நல் பாதம், Nal Paatham - சிறந்த திருவடிகள் உறும் கண்டாய், Urum Kandaai - நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை) ஓண் கமலம் தன்னால், Oon Kamalam Thannal - அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது) உறும் கண்டாய், Urum Kandaai - நமக்கு உரியது காண் சாத்தி, Saathi - (அத்தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து ஏத்தி, Aethi - துதித்து பணிந்து, Panindhu - நமஸ்கரித்து அவன் பேர், Avan Per - அவனது ஸஹஸ்ர ஈர் ஐந்நூறு, Eer Ainnuru - நாமங்களையும் எப்பொழுதும், Eppozhudum - அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற தவம், Thavam - தபஸ்ஸானது உறுமு கண்டாய், Urum Kandaai - உரியது காண். |