திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2259 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2259இரண்டாம் திருவந்தாதி || இப்படிப்பட்ட தபஸ் சை அனுசந்தித்து ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தம் அற லபிக்கப் பெற்றான் சதுர்முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார்- ஆஸ்ரய ணீயவஸ்து கை புகுந்த பின்பு-ஆஸ்ரயித்த பிரம்மாவை ஒப்பார் உண்டோ என்கிறது – இப்படி இருக்கிற தபஸ்ஸை அனுஷ்ட்டித்து ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தமற லபிக்கப் பெற்றான் சதுர் முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார் – 78
தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி நிவர்ந்தளப்ப நீட்டியபொற் பாதம், – சிவந்ததன் கையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர் பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின்.
பதவுரை Show / Hide
தரணி, Tharani - பூமியை
அளப்ப நிவர்ந்து, Alappa Nivarndhu - தாவியளப்பதாகத் தொடங்கின தரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய, Neetthiya - பாப்பின்
பொன் பாதம், Pon Paatham - அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து, Gangai Neer Peydhu - கங்க தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப்பணிமாறி
அனைத்து பேர் மொழிந்து, Anaiththu Per Mozhindhu - (பரமனுடைய) எல்லாத் திருநாமங்களையும் வாயாரச்சொல்லி
பின், Pin - பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர, Than Sivantha Kai Anaiththum Aara - தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான், Kazhuvinan - திருவடி விளக்கியவனான
நான் முகனே, Naan Mugane - பிரமனொருவனெ
தவம் செய்து பெற்றான், Thavam Seidhu Petraan - தவப்பயன் பெற்றவனாயிலை.