Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2260 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2260இரண்டாம் திருவந்தாதி || ஜகத்தை அளந்து கொண்ட செயலுடைய ஸ்ரீ வாமனனுடைய வ்ருத்தாந்தமானது – தாயார் அபேஷிக்க மறுத்துக் காடேறப் போன ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுடைய இத் தன்மைக்கு ஒக்கும் -என்கிறார்- திரு உலகு அளந்து அருளின நீர்மை–ஸ்ரீ ராமாவதாரத்தில் குணங்களுக்கு நேர் என்கிறது – ஜகத்தை அளந்து கொண்ட செயலை உடையனான -ஸ்ரீ வாமனனுடைய-வ்ருத்தாந்தமானது -தாயார் அபேக்ஷிக்க மறுத்துக் காடு ஏறப் போன ஸ்ரீ சக்கரவர்த்தித் திரு மகனுடைய இத்தன்மைக்கு ஒக்கும் என்கிறார் 79
பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் – சொல் நின்ற
தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த
நீணிலந்தான் அத்தனைக்கும் நேர்.
தாய், Thaai - மாதாவான கௌஸல்யை
பின் நின்று, Pin Nindru - பின் தொடர்ந்து
இரப்ப, Irappa - (என்னைவிட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான், Kelan - அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணைதோள், Peru Panaitol - சிறந்த முங்கில் போன் திருத்தோள்களையுடையளாய்
சொல் நின்ற, Sol Nindra - தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான், Thol Nalathaan - புஜபலத்தையுடையனும்
நேர் இல்லாதோன்றல், Ner Illaadondral - ஒப்பற்ற ஸ்வாமியுமான இராமபிரானுடைய
மொய் மலராள்தான், Moy Malaraalthaan - அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று, Mun Nindru - முன்னை நின்று
இரப்பாள், Irappaal - (இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும், Aththanaiykkum - (காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர், Avan Alandha Neel Neelam Thaan Ner - அப்பெருமான் மிகப்பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.