திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2262 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2262இரண்டாம் திருவந்தாதி || முன்பு இவனைக் காணப் பெற்றவர்கள் என் பட்டார்களோ என்றாரே – அவன் தன்னைத் தான் காணப் பெற்றுப் படுகிற பாட்டைச் சொல்லுகிறார் – கீழ் ஸ்ரீ தண்ட காரண்யத்தில் அக்காலத்தில் காணப் பெற்றவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கிறார் என்றுமாம் – அவர்களுக்கே அல்ல -எனக்கும் விடிந்தது என்கிறார் – நீர் கண்டபடி சொல்லிக் காணீர்-என்ன-சொல்லுகிறார் பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் -என் பட்டார்கள் -என்று பழங்கிணறு வாருகிறது என் – இப்போது அவனைக் கண்டு நான் தான் படுகிற பாட்டைப் பார்க்க மாட்டீர்களோ -என்கிறார் – 81
பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், – கனவில் மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே – மிகக்கண்டேன் ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான், வான்திகழும் சோதி வடிவு.
பதவுரை Show / Hide
பகல் கண்டேன், Pagal Kandein - இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல்விடிவைக் கண்டேன். (அதாவது என்னவென்றால்)
நாரணனை கண்டேன், Naaranai Kandein - ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதிதயனைக்கண்டேன்,
மீண்டு, Meendu - இன்னமும்,
கணவில், Kanavil - மாநஸஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே, Miga Meyye - மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி, Oon Thigazhum Nemi - திருமேனியில் விளங்குகின்ற திருவாழியையுடையவனும்
ஒளி திகழும் சே அடியான், Oli Thigazhum Se Adiyan - பிரகாசம் மிக்கதிருவடிகளையுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும், Vaan Thigazhum - பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு, Sothi Vadivu - சோதிமயமான வடிவத்தை
மிக கண்டேன், Miga Kandein - (இங்கே) நன்று ஸேவிக்கப்பெற்றேன்.