Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2263 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2263இரண்டாம் திருவந்தாதி || அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ -அவ் வடிவிற்குத் தகுதியான ஸ்ரீ நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் – கீழ் -ஸ்ரீ நாராயணனைக் கண்டார் -என்றார் -இப்போது ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் – வெறும் ஸ்ரீ நாராயணனை அல்ல -ஸ்ரீ திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் -பிரபையோடே காணப் பெற்றேன் – கீழே ஸ்ரீ நாரணனைக் கண்டேன் என்றார்–இப்பொழுது லஷ்மி சநாதமாகக் கண்டேன் என்கிறார் – வெறும் ஸ்ரீ நாரணனைக் கண்ட மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ மானான நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் – 82
வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்
படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், – அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,
கோலத்தா லில்லை குறை.
வடிகோலம், Vadikoolam - வடிக்கட்டின அழகையுடையவளும்
வாளநெடுங்கண், Vaalanedu Kaan - ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்
மாமலராள், Mamalaraal - சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செல்வி படிகோலம், Selvi Padikoolam - சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள், Pal Naal Akalaal - க்ஷணகாலமும் விட்டுப்பிரியாமல் எப்போதும் கூடியேயிருக்கின்றாள்
பின்னும், Pinnum - எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவத்தும்
ஞாலத்தாள், Naalathaal - பூமிப்பிராட்டியானவள்
அடிக்கோலி, Adikoli - பாரித்துக்கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ, Nalam Purindhadhu En Koloo - அப்பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக்கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை, Koolathaal Kurai Illai - (எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றியிருக்கும்படியான அழகினால் குறையில்லையன்றோ.