Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2264 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2264இரண்டாம் திருவந்தாதி || கீழே -74- பெரும் தமிழன் நல்லேன் பெரிது -என்று தம்மை மதித்து அநந்தரம் கவி பாடுவதும் செய்தார் – இங்கே ஸ்ரீ நாச்சியாரும் அவனுமான சேர்த்தியை அனுசந்தித்துக் கூசி – நாம் இவ் விஷயத்திலேயோ கவி பாட இழிவது -என்ன சாஹசிகனோ -என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் – அங்கு சர்வ விசஜாதீய வஸ்துவைப் பேசுகையாலே என்னோடு ஒப்பார் உண்டோ என்றார் – இப்போது அவ் வஸ்து தன்னை ஸ்ரீ லஷமீ சநாதமாக அனுசந்திக்கையாலே அங்குத்தைக்கு விசத்ருசமாகச் சொன்னேன் -என்கிறார் – பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் உன்னை என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் -3-1-6- நல்லேன் பெரிது -என்றார் ஐஸ்வர் யத்தைக் கண்டு வெருவித் தீயேன் என்கிறார் – பேசிற்றும் தப்பாய் பலம் ஆசைப்பட்டதும் தப்பாய்த்து – முன்பு சர்வ விசாஜீதிய வஸ்துவை பேசுகையாலே–என்னோடு ஒப்பார் உண்டோ பெரிய தமிழன் பெரிய நல்லேன் என்று சொன்னார் – இப்போது அவ்வஸ்து தன்னை ஸ்ரீ லஷ்மீ சநாதமாக-அனுசந்திகையாலே அங்குத்தைக்கு விசத்ருசமாக சொன்னேன் -என்கிறார் பெரும் தமிழன் நல்லேன் பெருகு -என்று அவனுக்குக் கவி பாடப் பெற்ற பெரு மதிப்பாலே முன்பு செருக்கி வார்த்தை சொன்னவர் – இப்போது ஸ்ரீ நாய்ச்சிமாரும் தானும் சேர்ந்து இருக்கிற பெரிய மேன்மையைக் கண்டு கூசி – நாம் இவ்விஷயத்தையோ கவி பாடப் பெரு மதிப்பாலே இழந்தது -என்ன சாஹாசிகனோ-என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் – 83
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,
மறையாங் கெனவுரைத்த மாலை, – இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,
மாயன்கண் சென்ற வரம்.
மறை, Marai - வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை, Aangu Ena Uraitha Maalai - ப்ரத்யக்ஷித்துச்சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)
மாயன் கண் சென்ற வாரம, Maayan Kan Senra Vaarama - அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும், Irayeenum - ஸ்வஸ்பமான பலனையாகிலும்
குறை ஆக, Kurai Aaga - குறையுண்டாம்படி
வெம் சொற்கள், Vem Sorkkal - செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன், Koorainean - பேசினேன்
கூறி, Koora - அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல்என்றே, Eeyum Kolendree - (நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப்பகலும், Ennaipagalum - வெகுகாலமாக
இருந்தேன், Irundhen - இருக்கின்றேன்.