Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2265 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2265இரண்டாம் திருவந்தாதி || மற்றவை எல்லாம் செய்தபடி செய்ய ரசிக்கும் விஷயம் இதுவே கிடி கோள் என்கிறார் – அவனை விட்டு வர ஒண்ணாமைக்கு ஹேது இருக்கிற படி – ஒரு ஆஸ்ரிதனுக்குத் தன்னைக் கொடுத்த படி கண்டவாறே வெருவுதல் தீர்ந்து நம்மது என்று அனுபவிக்கிறார் – முன்பு இல்லாத நரம் கலந்த சிங்கமாய் அவனைக் கீண்ட ஸ்ரீ மான் உடைய சரண்யத்வமே ஒரு தேசத்தில் தேடித் போக வேண்டாத அமிர்தம் விஷய வைபவம் சொல்லில் -பொல்லாங்கு முதலானவை எல்லாம் கிடக்கிடீர் -விஷயத்தினுடைய ரஸ்யத்தையைப் பார்த்தால் சொல்லி அல்லது நிற்கப் போமோ -என்கிறார் – 84
வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,
உரம்கருதி மூர்க்கத் தவனை, – நரம்கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,
அங்கண்மா ஞாலத் தமுது.
வரம் கருதி, Varam Karuthi - (தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத, Thannai Vanangadha - (ஸர்வேச்வரனான) தன்னை வண“காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி, Vanmai Uram Karuthi - (தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை, Moorka Thavanai - மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை
நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட, Naram Kalanda Singam Aaykeenda - நரசிங்கவுருக்கொண்டு பிளந்தொழிந்த
திருவன், Thiruvan - அழகனுடைய
அடி இணையே, Adi Inaiye - உபயபாதமே
அம் கண் மா ஞாலத்து, Am Kan Maa Nyaalathu - அழகிய இடமுடைத் தான இம்மாநிலத்தில்
அமுது, Amuthu - (போக்யமான) அம்ருதமாகும்.