| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2265 | இரண்டாம் திருவந்தாதி || மற்றவை எல்லாம் செய்தபடி செய்ய ரசிக்கும் விஷயம் இதுவே கிடி கோள் என்கிறார் – அவனை விட்டு வர ஒண்ணாமைக்கு ஹேது இருக்கிற படி – ஒரு ஆஸ்ரிதனுக்குத் தன்னைக் கொடுத்த படி கண்டவாறே வெருவுதல் தீர்ந்து நம்மது என்று அனுபவிக்கிறார் – முன்பு இல்லாத நரம் கலந்த சிங்கமாய் அவனைக் கீண்ட ஸ்ரீ மான் உடைய சரண்யத்வமே ஒரு தேசத்தில் தேடித் போக வேண்டாத அமிர்தம் விஷய வைபவம் சொல்லில் -பொல்லாங்கு முதலானவை எல்லாம் கிடக்கிடீர் -விஷயத்தினுடைய ரஸ்யத்தையைப் பார்த்தால் சொல்லி அல்லது நிற்கப் போமோ -என்கிறார் – 84 | வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை, உரம்கருதி மூர்க்கத் தவனை, – நரம்கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே, அங்கண்மா ஞாலத் தமுது. | வரம் கருதி, Varam Karuthi - (தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து தன்னை வணங்காத, Thannai Vanangadha - (ஸர்வேச்வரனான) தன்னை வண“காதிருந்தவனும் வன்மை உரம் கருதி, Vanmai Uram Karuthi - (தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து மூர்க்க தவனை, Moorka Thavanai - மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட, Naram Kalanda Singam Aaykeenda - நரசிங்கவுருக்கொண்டு பிளந்தொழிந்த திருவன், Thiruvan - அழகனுடைய அடி இணையே, Adi Inaiye - உபயபாதமே அம் கண் மா ஞாலத்து, Am Kan Maa Nyaalathu - அழகிய இடமுடைத் தான இம்மாநிலத்தில் அமுது, Amuthu - (போக்யமான) அம்ருதமாகும். |