Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2266 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2266இரண்டாம் திருவந்தாதி || அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்- இவருடைய அமிர்தம் அவனைப் பேசும் சொல்லும் – அவனுடைய ரஸ்யத்தையை அனுசந்தித்தவாறே -அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார் – 85
அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,
அமுதன்று கொண்டுகந்தான் என்றும், – அமுதன்ன
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
நன்மாலை யேத்தி நவின்று.
அமுது என்றும், Amuthu Endrum - அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும், Then Endrum - தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும், Azhiyan Endrum - திருவாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும், Andru Amuthu Kondu Uganthaan Endrum - முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்
சொல்லப்பட்ட, Sollappatta - சொல்லப்பட்டிருக்கின்ற
நல் மாலை, Nal Maalai - விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை, Amuthu Anna Soll Maalai - அம்ருதம் போன்ற இப்பாசுரங்களினால்
ஏத்தி ஏத்தி நவின்று தொழுதேன், Aethi Aethi Navinru Thozhuthen - பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.