Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2267 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2267இரண்டாம் திருவந்தாதி || அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் – சமாதிக தரித்ரமான வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ – பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து- அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பார்களோ-சாதன அனுஷ்டானம் பண்ணிக் காண்கிறவர்கள் -என்கிறார் – அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ -சாதன அனுஷ்டானம் -பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் – 86
நவின்று ரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே
பயின்றதனால் பெற்றபயன் என்கொல், – பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று?
நவின்று உரைத்த, Navinru Uraitha - (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள், Navalargal - கவிகள்
நாள் மலர் கொண்டு, Naal Malar Kondu - அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று, Aange Payinru - அந்த ஸர்வேச்வரனிடத்தில் நெருங்கி யாச்ரயித்து
அதனால் பெற்ற பயன் என்சொல், Adhanal Petra Payan Ensol - அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜ நம் என்னோ
பயின்றார் தம், Payinra Tham - நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால், Mei Thavaththal - சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய, Kaanbu Ariya - காணமுடியாதவனும்
மேகம் மணி வண்ணனை, Megam Mani Vannana - மேகத்தையும் நீல மணியையும் போன்றநிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான், Yaan - அடியேன்
இன்று, Indru - இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன், Eth Thavaththal Kol Kaanban - எந்தத் தபஸ்ஸினால் காணப்பெற்றேன்? (அவனே காட்டிக்கொடுக்கக் கண்டேனேயொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை)