| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2267 | இரண்டாம் திருவந்தாதி || அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் – சமாதிக தரித்ரமான வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ – பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து- அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பார்களோ-சாதன அனுஷ்டானம் பண்ணிக் காண்கிறவர்கள் -என்கிறார் – அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ -சாதன அனுஷ்டானம் -பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் – 86 | நவின்று ரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே பயின்றதனால் பெற்றபயன் என்கொல், – பயின்றார்தம் மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான் எத்தவத்தால் காண்பன்கொல் இன்று? | நவின்று உரைத்த, Navinru Uraitha - (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற நாவலர்கள், Navalargal - கவிகள் நாள் மலர் கொண்டு, Naal Malar Kondu - அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு ஆங்கே பயின்று, Aange Payinru - அந்த ஸர்வேச்வரனிடத்தில் நெருங்கி யாச்ரயித்து அதனால் பெற்ற பயன் என்சொல், Adhanal Petra Payan Ensol - அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜ நம் என்னோ பயின்றார் தம், Payinra Tham - நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய மெய் தவத்தால், Mei Thavaththal - சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால் காண்பு அரிய, Kaanbu Ariya - காணமுடியாதவனும் மேகம் மணி வண்ணனை, Megam Mani Vannana - மேகத்தையும் நீல மணியையும் போன்றநிறத்தை யுடையனுமான எம்பெருமானை யான், Yaan - அடியேன் இன்று, Indru - இப்போது எத் தவத்தால் கொல் காண்பன், Eth Thavaththal Kol Kaanban - எந்தத் தபஸ்ஸினால் காணப்பெற்றேன்? (அவனே காட்டிக்கொடுக்கக் கண்டேனேயொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை) |