Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2268 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2268இரண்டாம் திருவந்தாதி || உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் – இப்பேறு இன்று பெற்றேன் அல்லேன் என்கிறார்- சாதன அனுஷ்டானமும்–யோக்யதையும் இன்றி இருக்க-கண்டிலேனோ என்கிறார் உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப ஸ்தானான காலமே தொடங்கி அடிமைச் சுவட்டோடு கூட அவன் படிகளை அனுபவிக்கப் பெற்றவன் அன்றோ என்கிறார் – 87
இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்
சென்றாங் களந்த திருவடியை, – அன்று
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,
திருக்கோட்டி எந்தை திறம்.
அன்று கரு கோட்டியுன் கிடந்து, Andru Karu Kottiyun Kidandhu - முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து
திருக்கோட்டி எந்தை திறம், Thirukkoatti Endhai Thiram - திருக்கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை
கண்டேன், Kandeen - கண்டு அநுபவிக்கப்பெற்றேன்
கை தொழுதேன், Kai Thozhuthen - கைதொழவும் பெற்றேன், (ஆனபின்பு)
இரு நிலத்தை, Iru Nilathai - விசாலமான இந்நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை, Aangu Sendru Alanda Thiru Adiyai - அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்று ஆ அறிகின்றேன் அல்லேன், Indru Aa Arikindren Alleen - இன்றைக்குத்தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்பவாஸமே தொடங்கி அறிவேன்)