Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2269 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2269இரண்டாம் திருவந்தாதி || அவன் தானே விஷயீ கரித்தாற்கு அவனைக் கிடைக்கும் அத்தனை அல்லது வேறு சிலருக்குக் கிடையாது என்கிறது- அவன் தானே விஷயீ கரித்தார்க்கு அவனைக் கிடைக்கும்-இத்தனை அல்லது வேறு சிலருக்கு கிடையாது -என்கிறது அவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை –வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் – 88
திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,
திறம்பா வருசென்றார்க் கல்லால், – திறம்பாச்
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்
கடிநகர வாசற் கதவு.
தென் அரங்கத்து எந்தை, Then Arangathu Endhai - தென்னரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கு மெம்பெருமானுடைய
திறம்பா வழி, Thirampaa Vazhi - பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால், Sendraarkku Allaal - நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம், Thaam - தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி, Thirampaa Sedi Narakai Neekki - அறுக்கமுடியாத புதர்போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக்கொண்டு
செல்வதன் முன், Selvadhan Mun - போவதற்குள்ளே
வானோர், Vaanor - நித்யஸூரிகளுடையதும்
கடி, Kadi - அரணையுடையதானதுமான
நகரம், Nagaram - வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு, Vaasal Kathavu - வாசற் கதவானது
திறம் பிற்று, Thiram Pithru - மூடிக்கொண்டதாகும்
இனி அறிந்தேன், Ini Arindhen - (இதை) இப்போது அறிந்து கொண்டேன்