திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2269 | இரண்டாம் திருவந்தாதி || அவன் தானே விஷயீ கரித்தாற்கு அவனைக் கிடைக்கும் அத்தனை அல்லது வேறு சிலருக்குக் கிடையாது என்கிறது- அவன் தானே விஷயீ கரித்தார்க்கு அவனைக் கிடைக்கும்-இத்தனை அல்லது வேறு சிலருக்கு கிடையாது -என்கிறது அவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை –வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் – 88 | திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,
திறம்பா வருசென்றார்க் கல்லால், – திறம்பாச்
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்
கடிநகர வாசற் கதவு. | பதவுரை Show / Hideதென் அரங்கத்து எந்தை, Then Arangathu Endhai - தென்னரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கு மெம்பெருமானுடைய திறம்பா வழி, Thirampaa Vazhi - பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே) சென்றார்க்கு அல்லால், Sendraarkku Allaal - நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு) தாம், Thaam - தாமாகவே திறம்பா செடி நரகை நீக்கி, Thirampaa Sedi Narakai Neekki - அறுக்கமுடியாத புதர்போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக்கொண்டு செல்வதன் முன், Selvadhan Mun - போவதற்குள்ளே வானோர், Vaanor - நித்யஸூரிகளுடையதும் கடி, Kadi - அரணையுடையதானதுமான நகரம், Nagaram - வைகுந்தமா நகரத்தினுடைய வாசல் கதவு, Vaasal Kathavu - வாசற் கதவானது திறம் பிற்று, Thiram Pithru - மூடிக்கொண்டதாகும் இனி அறிந்தேன், Ini Arindhen - (இதை) இப்போது அறிந்து கொண்டேன் |