திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2269 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2269இரண்டாம் திருவந்தாதி || அவன் தானே விஷயீ கரித்தாற்கு அவனைக் கிடைக்கும் அத்தனை அல்லது வேறு சிலருக்குக் கிடையாது என்கிறது- அவன் தானே விஷயீ கரித்தார்க்கு அவனைக் கிடைக்கும்-இத்தனை அல்லது வேறு சிலருக்கு கிடையாது -என்கிறது அவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை –வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் – 88
திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை, திறம்பா வருசென்றார்க் கல்லால், – திறம்பாச் செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர் கடிநகர வாசற் கதவு.
பதவுரை Show / Hide
தென் அரங்கத்து எந்தை, Then Arangathu Endhai - தென்னரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கு மெம்பெருமானுடைய
திறம்பா வழி, Thirampaa Vazhi - பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால், Sendraarkku Allaal - நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம், Thaam - தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி, Thirampaa Sedi Narakai Neekki - அறுக்கமுடியாத புதர்போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக்கொண்டு
செல்வதன் முன், Selvadhan Mun - போவதற்குள்ளே
வானோர், Vaanor - நித்யஸூரிகளுடையதும்
கடி, Kadi - அரணையுடையதானதுமான
நகரம், Nagaram - வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு, Vaasal Kathavu - வாசற் கதவானது
திறம் பிற்று, Thiram Pithru - மூடிக்கொண்டதாகும்
இனி அறிந்தேன், Ini Arindhen - (இதை) இப்போது அறிந்து கொண்டேன்