Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2270 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2270இரண்டாம் திருவந்தாதி || நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் – இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் – பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் — ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ-அர்த்தித்வம் தோற்ற மாணியாய் அன்றோ கொண்டது- நீர் இப்படி சொல்லுகைக்கு நம்மை பற்றினார்க்கு நாம் எங்கே உதவக் கண்டீர் என்ன – விரோதியைப் போக்கியும் விரகாலே ஆஸ்ரிதர் கார்யம் செய்யும் படியும் சொல்லி இதுவன்றோ உன் படி -என்கிறார் – 89
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,
அதவிப்போர் யானை ஒசித்து, – பதவியாய்ப்
பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,
மாணியாய்க் கொண்டிலையே மண்.
முன், Mun - முற்காலத்தில்
கதம் சிறந்த, Kathai Sirandha - கோபம் மிகுந்த
கஞ்சனை, Kanjanai - கம்ஸனை
கதவி காய்ந்து, Kathavi Kaayndhu - கோபித்து முடித்து
போர் யானை, Por Yaanai - போர் செய்வதாக எதிர்த்துவந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து, Osiththu - கொம்பு முறித்து
அதவி, Adhavi - கொன்று,
பண்டு ஒரு கால், Pandhu Oru Kaal - முன்னொரு காலத்தில்
பதவியாய், Pathaviyai - நீர்மையை யுடையனாயக்கொண்டு
மாணி ஆய், Maani Aay - பிரமசாரியாகி
மாவலியை, Mavaliyai - மஹாபலியினிடத்திலே
பாணியால், Paaniyaal - கையினாலே
நீர் ஏற்று, Neer Aetru - தானம் வாங்கி
மண் கொண்டிலையே, Man Kondilaye - பூமியைப்பெற்றாயல்லையோ?