Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2271 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2271இரண்டாம் திருவந்தாதி || கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று நம்முடைய செயல்களையே சொல்லும் இத்தனையோ – உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன – எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் – கம்சனைக் கொன்றோம்–யானையைக் கொன்றோம்-பூமியை அளந்தோம் என்று நம்முடைய செயல்களைச் சொல்லும் அத்தனையோ – உமக்கு பெற வேண்டுமது சொல்லீரோ என்ன-சொல்கிறார் – நாம் ஆஸ்ரிதற்குச் செய்த கார்யங்களை வகையிட்டுச் சொல்லுகிறது என் – உமக்குப்பெற வேண்டுவது சொல்லீர் என்ன – உன்னை ஆஸ்ரயித்த போதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேன் அன்றோ -என்கிறார் 90
மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, – நண்ணித்
திருமாலை செங்க ணெடியானை, எங்கள்
பெருமானைக் கைதொழுத பின்.
திருமாலை, Thirumalai - பிராட்டியினடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை, Nediyaanai - ஸர்வேச்வரனுமான
எங்கள் பெருமானை, Engal Perumanai - எம்பெருமானை
நண்ணி, Nanni - கிட்டி
கை தொழுத பின், Kai Thozhuda Pin - அஞ்ஜலி பண்ணி ஆச்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே, Man Ulagam Aalelae - இவ்விபூதியை நானிட்டவழக்காக நிர்வஹிக்கமாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய், Vaanavarkkum Vaanavan Aay - தேவாதிதேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து, Vin Ulagam Than Agathu - நித்யவிபூதியிலே
மேவேனே, Mevenae - நித்யாநந்த மநுபவிக்கமாட்டேனோ?