| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2271 | இரண்டாம் திருவந்தாதி || கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று நம்முடைய செயல்களையே சொல்லும் இத்தனையோ – உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன – எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் – கம்சனைக் கொன்றோம்–யானையைக் கொன்றோம்-பூமியை அளந்தோம் என்று நம்முடைய செயல்களைச் சொல்லும் அத்தனையோ – உமக்கு பெற வேண்டுமது சொல்லீரோ என்ன-சொல்கிறார் – நாம் ஆஸ்ரிதற்குச் செய்த கார்யங்களை வகையிட்டுச் சொல்லுகிறது என் – உமக்குப்பெற வேண்டுவது சொல்லீர் என்ன – உன்னை ஆஸ்ரயித்த போதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேன் அன்றோ -என்கிறார் 90 | மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய், விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, – நண்ணித் திருமாலை செங்க ணெடியானை, எங்கள் பெருமானைக் கைதொழுத பின். | திருமாலை, Thirumalai - பிராட்டியினடத்தில் வியாமோஹமுடவனும் செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும் நெடியானை, Nediyaanai - ஸர்வேச்வரனுமான எங்கள் பெருமானை, Engal Perumanai - எம்பெருமானை நண்ணி, Nanni - கிட்டி கை தொழுத பின், Kai Thozhuda Pin - அஞ்ஜலி பண்ணி ஆச்ரயித்த பின்பு மண் உலகம் ஆளேளே, Man Ulagam Aalelae - இவ்விபூதியை நானிட்டவழக்காக நிர்வஹிக்கமாட்டேனோ? வானவர்க்கும் வானவன் ஆய், Vaanavarkkum Vaanavan Aay - தேவாதிதேவனாய்க் கொண்டு விண் உலகம் தன் அகத்து, Vin Ulagam Than Agathu - நித்யவிபூதியிலே மேவேனே, Mevenae - நித்யாநந்த மநுபவிக்கமாட்டேனோ? |