திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2273 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2273இரண்டாம் திருவந்தாதி || அவனை ஆஸ்ரயிக்க உங்களுடைய அபேஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – நரகம் புகாமையே அல்ல -அபேஷிதம் வேண்டிலும் அவனையே பற்ற வேணும் – ஒரு நாள் ஒரு திரு நாமம் சொன்னவனை-ஒரு நாளும் மறவாதவனுடைய திரு நாமங்களை ஏத்துங்கோள் – அவனை ஆஸ்ரயிக்க உங்களுக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்- 92
அடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும் படியான் கொடிமேல்புள் கொண்டான், – நெடியான்றன் நாமமே ஏத்துமின்க ளேத்தினால்,தாம்வேண்டும் காமமே காட்டும் கடிது.
பதவுரை Show / Hide
முன், Mun - முன்னே
அடியால், Adiyal - திருவடியினால்
கஞசனே, Kanjanai - கம்ஸனை
செற்று, Settru - உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான், Amarar Aethum Padiyan - தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடிமேல் புள் கொண்டான், Kodimel Pul Kondaaan - த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன், Nedhiyan Than - ஸர்வேச்வரனுடைய
நாமமே, Naamame - திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள், Aethuminngal - ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால், Aethinaal - அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம், Thaam Vendum Kaamam - தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது, Kadithu - விரைவாக
காட்டும், Kaatum - (அத்திருநாமம்) பெறுவிக்கும்