| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2273 | இரண்டாம் திருவந்தாதி || அவனை ஆஸ்ரயிக்க உங்களுடைய அபேஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – நரகம் புகாமையே அல்ல -அபேஷிதம் வேண்டிலும் அவனையே பற்ற வேணும் – ஒரு நாள் ஒரு திரு நாமம் சொன்னவனை-ஒரு நாளும் மறவாதவனுடைய திரு நாமங்களை ஏத்துங்கோள் – அவனை ஆஸ்ரயிக்க உங்களுக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்- 92 | அடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும் படியான் கொடிமேல்புள் கொண்டான், – நெடியான்றன் நாமமே ஏத்துமின்க ளேத்தினால்,தாம்வேண்டும் காமமே காட்டும் கடிது. | முன், Mun - முன்னே அடியால், Adiyal - திருவடியினால் கஞசனே, Kanjanai - கம்ஸனை செற்று, Settru - உதைத்துக் கொன்றதனாலே அமரர் ஏத்தும் படியான், Amarar Aethum Padiyan - தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும் கொடிமேல் புள் கொண்டான், Kodimel Pul Kondaaan - த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான நெடியான் தன், Nedhiyan Than - ஸர்வேச்வரனுடைய நாமமே, Naamame - திருநாமங்களையே கொண்டு ஏத்துமின்கள், Aethuminngal - ஸ்தோத்ரம் பண்ணுங்கள் ஏத்தினால், Aethinaal - அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால் தாம் வேண்டும் காமம், Thaam Vendum Kaamam - தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை கடிது, Kadithu - விரைவாக காட்டும், Kaatum - (அத்திருநாமம்) பெறுவிக்கும் |