Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2274 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2274இரண்டாம் திருவந்தாதி || கொடிய நரகானுபவம் பிரத்யாசன்னம் ஆவதற்கு முன்னே நிரதிசய போக்யனாய்- பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கள் என்கிறார் – ஆஸ்ரயிக்கைக்கு ஒரு உபாயம் சொல்லுகிறது- குரூரமான நரகம் வந்து கிட்டுவதுக்கு முன்னே -நிரதிசய போக்யனாய் -பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கோள் -என்கிறார் – 93
கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை,
கொடிதென் றதுகூடா முன்னம், – வடிசங்கம்
கொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை,
கொங்கைநஞ் சுண்டானை ஏத்துமினோ உற்று.
கொடுநரகம், Kodunaragam - க்ரூரமான நரகமானது
கடிது, Kadithu - கண்கொண்டு காணவொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும், Pirkkalum - அதற்குமேலும்
செய்கை, Seigai - (அங்கு யமபடர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது, Kodithu - பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று, Endru - என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம், Athu Kooda Munnam - அந்த நரகவேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை, Vadi Sangam Kondaana - கூர்மையான த்வநியையுடைய சங்கைத் திருக்கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை, Koondhal Vaai Keendaana - கேசியின்வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை, Kongai Nanju Undaana - (பேய்ச்சின்) மூலையில் தடவியிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று, Utru - பொருந்தி
ஏத்துமின், Aethumin - ஸ்தோத்திரம் பண்ணுங்கள்