| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2274 | இரண்டாம் திருவந்தாதி || கொடிய நரகானுபவம் பிரத்யாசன்னம் ஆவதற்கு முன்னே நிரதிசய போக்யனாய்- பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கள் என்கிறார் – ஆஸ்ரயிக்கைக்கு ஒரு உபாயம் சொல்லுகிறது- குரூரமான நரகம் வந்து கிட்டுவதுக்கு முன்னே -நிரதிசய போக்யனாய் -பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கோள் -என்கிறார் – 93 | கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை, கொடிதென் றதுகூடா முன்னம், – வடிசங்கம் கொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை, கொங்கைநஞ் சுண்டானை ஏத்துமினோ உற்று. | கொடுநரகம், Kodunaragam - க்ரூரமான நரகமானது கடிது, Kadithu - கண்கொண்டு காணவொண்ணாதபடி கோரமாயிருக்கும் பிற்காலும், Pirkkalum - அதற்குமேலும் செய்கை, Seigai - (அங்கு யமபடர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள் கொடிது, Kodithu - பொறுக்க முடியாதனவாயிருக்கும், என்று, Endru - என்று தெரிந்து கொண்டு அது கூடா முன்னம், Athu Kooda Munnam - அந்த நரகவேதனை நேராதபடி வடி சங்கம் கொண்டானை, Vadi Sangam Kondaana - கூர்மையான த்வநியையுடைய சங்கைத் திருக்கையிலே உடையவனும் கூந்தல் வாய் கீண்டானை, Koondhal Vaai Keendaana - கேசியின்வாயைக் கீண்டொழித் தவனும் கொங்கை நஞ்சு உண்டானை, Kongai Nanju Undaana - (பேய்ச்சின்) மூலையில் தடவியிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை உற்று, Utru - பொருந்தி ஏத்துமின், Aethumin - ஸ்தோத்திரம் பண்ணுங்கள் |