| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2275 | இரண்டாம் திருவந்தாதி || என்னுடைய நெஞ்சு கண்டி கோளே-ஏத்துகிறபடி -அப்படியே நீங்களும் ஏத்துங்கள் -என்கிறார் – ஜகத் ரஷண ஸ்வபாவனை நிரதிசய போக்யனானவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாராய்ப் போலே -சந்த்யா வந்தனாதிகளைப் பண்ணிக் காட்டுமா போலே- என்னுடைய நெஞ்சு ஏத்துகிறாற் போலே-நீங்களும் ஏத்துங்கோள் என்கிறார் – தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாரைப் போலே என்னுடைய நெஞ்சு கண்டீர்களே ஏத்துகிற படி -அப்படியே நீங்களும் ஜகத் ரக்ஷண ஸ்வபாவனாய் நிரதிசய போக்யனானவனை ஏத்துங்கோள் -என்கிறார் 94 | உற்று வணங்கித் தொழுமின், உலகேழும் முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், – பற்றிப் பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள் இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு. | உலகு எழும் முற்றும் விழுங்கும், Ulaku Ezhum Mutrum Vizhungum - உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும் முகில் வண்ணன், Mugil Vannan - மேகம் போன்ற வடிவையுடையவனும் பொருந்தா தான், Porundha Thaan - (ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய மார்பு, Maarbu - மார்வை பற்றி, Patri - பிடித்து இடந்து, Idanthu - கிழித்தவனும் பூ பாடகத்துள் இருந்தானை, Poo Paadakathul Irundhaana - அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை என் நெஞ்சு, En Nenju - என் மனமானது ஏத்தும், Aethum - துதிக்கும் (நீங்களும் இப்படியே) உற்று வணங்கி தொழுமின், Utru Vanangi Thozhumin - பொருந்தி வணங்கி ஆச்ரயியுங்கோள். |