Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2276 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2276இரண்டாம் திருவந்தாதி || ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் ஸ்ரீ திரு வத்தியூரிலே நின்றருளி என்னுடைய சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் – அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி- காலோ பலஷித சகல பதார்த்தங்களையும் உண்டாக்கினவன் – எல்லாரும் ஏத்தும்படி ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் – ஸ்ரீ திரு அத்தியூரில் வசிக்கிறவன் – ஜகத் காரண பூதனாய் -சர்வ லோக சரண்யன் ஆனவன் -திரு வத்தியூரிலே நின்று அருளி – என்னுடைய சர்வ அவயவங்களிலும் வந்து புகுந்தான் -என்கிறார் – 95
என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், – முன்னம்சேய்
ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்
ஆழியான் அத்தியூ ரான்.
தானவனை, Thaanavanai - இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம், Val Nenjam - வலிய மார்வை
கீண்ட, Keenda - கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன், Mani Vannan - நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் செய் ஊழியான், Munnam Sei Oozhiyan - நெடுங்காலமாக வுள்ளவனும்
ஊழி பெயர்த்தான், Oozhi Peyartthan - காலம் முதலிய ஸகல வஸ்துக்களையு முண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான், Ulaku Aeththum Azhiyaan - உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான், Aththiyooran - ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான், En Nenjam Meyaan - என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்
என் சென்னியான், En Chennian - என்னுடைய தலையிலே உள்ளான்.