| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2276 | இரண்டாம் திருவந்தாதி || ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் ஸ்ரீ திரு வத்தியூரிலே நின்றருளி என்னுடைய சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் – அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி- காலோ பலஷித சகல பதார்த்தங்களையும் உண்டாக்கினவன் – எல்லாரும் ஏத்தும்படி ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் – ஸ்ரீ திரு அத்தியூரில் வசிக்கிறவன் – ஜகத் காரண பூதனாய் -சர்வ லோக சரண்யன் ஆனவன் -திரு வத்தியூரிலே நின்று அருளி – என்னுடைய சர்வ அவயவங்களிலும் வந்து புகுந்தான் -என்கிறார் – 95 | என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், – முன்னம்சேய் ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும் ஆழியான் அத்தியூ ரான். | தானவனை, Thaanavanai - இரணியனாகிற அகரனுடைய வல் நெஞ்சம், Val Nenjam - வலிய மார்வை கீண்ட, Keenda - கிழித்தொழித்தவனும் மணி வண்ணன், Mani Vannan - நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும் முன்னம் செய் ஊழியான், Munnam Sei Oozhiyan - நெடுங்காலமாக வுள்ளவனும் ஊழி பெயர்த்தான், Oozhi Peyartthan - காலம் முதலிய ஸகல வஸ்துக்களையு முண்டாக்கினவனும் உலகு ஏத்தும் ஆழியான், Ulaku Aeththum Azhiyaan - உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும் அத்தியூரான், Aththiyooran - ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான் என் நெஞசம் மேயான், En Nenjam Meyaan - என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான் என் சென்னியான், En Chennian - என்னுடைய தலையிலே உள்ளான். |