திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2276 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2276இரண்டாம் திருவந்தாதி || ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் ஸ்ரீ திரு வத்தியூரிலே நின்றருளி என்னுடைய சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் – அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி- காலோ பலஷித சகல பதார்த்தங்களையும் உண்டாக்கினவன் – எல்லாரும் ஏத்தும்படி ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் – ஸ்ரீ திரு அத்தியூரில் வசிக்கிறவன் – ஜகத் காரண பூதனாய் -சர்வ லோக சரண்யன் ஆனவன் -திரு வத்தியூரிலே நின்று அருளி – என்னுடைய சர்வ அவயவங்களிலும் வந்து புகுந்தான் -என்கிறார் – 95
என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், – முன்னம்சேய் ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும் ஆழியான் அத்தியூ ரான்.
பதவுரை Show / Hide
தானவனை, Thaanavanai - இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம், Val Nenjam - வலிய மார்வை
கீண்ட, Keenda - கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன், Mani Vannan - நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் செய் ஊழியான், Munnam Sei Oozhiyan - நெடுங்காலமாக வுள்ளவனும்
ஊழி பெயர்த்தான், Oozhi Peyartthan - காலம் முதலிய ஸகல வஸ்துக்களையு முண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான், Ulaku Aeththum Azhiyaan - உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான், Aththiyooran - ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான், En Nenjam Meyaan - என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்
என் சென்னியான், En Chennian - என்னுடைய தலையிலே உள்ளான்.