Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2277 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2277இரண்டாம் திருவந்தாதி || உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது — இரண்டாலும் -ஸ்ரீ கருட வாகனத்வம் -ஸ்ரீ சேஷ சாயித்வம் -ஸ்ரீ சர்வேஸ்வரன் என்றபடி – உபய விபூதி உக்தனானவனை பெரிய மேன்மையை யுடையவன் கிடீர் என்னை இப்படி விரும்புகிறான் என்கிறார் – 96
அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், – மூத்தீ
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.
புள்ளை ஊர்வான், Pullai Oorvaan - பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான், Ani Maniyin Thuththiseer Naagaththin Mel Thuyilvaan - அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய் படப்பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான், Mutthi Aavaan - மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான், Marai Aavaan - வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான், Maa Kadal Nanju Undaan Thanakkum Irai Aavaan - பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான், Engal Piraan - எம்பெருமான்
அத்தியூரான், Aththiyooran - ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.