Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2278 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2278இரண்டாம் திருவந்தாதி || என்னை விஷயீ கரிக்கைக்காக ஸ்ரீ திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் – ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்தாய்-ஸ்ரீ திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு ஸ்ரீ பாம்பணை மேல் சேர்ந்தாய் என்னை விஷயீ கரிக்கைக்காக ஸ்ரீ திருக் குடந்தையில் ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினாய் -என்கிறார் – 97
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,
செங்க ணெடுமால் திருமார்பா, – பொங்கு
படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,
குடமூக்கில் கோயிலாக் கொண்டு.
செம் கண் நெடுமால், Sem Kan Nedumaal - சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா, Thirumaarpaa - பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ, Imaiyor Thalai Magan Nee - நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான், Engal Perumaan - எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல், Kudamookka Il - கும்பகோக் க்ஷேத்ரத்தை
கோயில் ஆ கொண்டு, Koyil Aa Konda - கோயிலாகத் திருவுள்ளம்பற்றி
பொங்கு படம் மூக்கின், Pongu Padam Mookkin - விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய், Aayiram Vaai - ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு, Paambu - ஆதிசேஷனாகிற
அணை மேல், Anai Mel - படுக்கையின் மீது
சேர்ந்தாய், Serndhaai - பள்ளி கொண்டருளினாய்.