| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2278 | இரண்டாம் திருவந்தாதி || என்னை விஷயீ கரிக்கைக்காக ஸ்ரீ திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் – ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்தாய்-ஸ்ரீ திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு ஸ்ரீ பாம்பணை மேல் சேர்ந்தாய் என்னை விஷயீ கரிக்கைக்காக ஸ்ரீ திருக் குடந்தையில் ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினாய் -என்கிறார் – 97 | எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ, செங்க ணெடுமால் திருமார்பா, – பொங்கு படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய், குடமூக்கில் கோயிலாக் கொண்டு. | செம் கண் நெடுமால், Sem Kan Nedumaal - சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே! திருமார்பா, Thirumaarpaa - பிராட்டியைத் திருமார்பிலுடையவனே! இமையோர் தலை மகன் நீ, Imaiyor Thalai Magan Nee - நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ எங்கள் பெருமான், Engal Perumaan - எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு குடமூக்கு இல், Kudamookka Il - கும்பகோக் க்ஷேத்ரத்தை கோயில் ஆ கொண்டு, Koyil Aa Konda - கோயிலாகத் திருவுள்ளம்பற்றி பொங்கு படம் மூக்கின், Pongu Padam Mookkin - விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும் ஆயிரம் வாய், Aayiram Vaai - ஆயிரம் வாயையுடையவனுமான பாம்பு, Paambu - ஆதிசேஷனாகிற அணை மேல், Anai Mel - படுக்கையின் மீது சேர்ந்தாய், Serndhaai - பள்ளி கொண்டருளினாய். |