Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2279 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2279இரண்டாம் திருவந்தாதி || தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதா நங்களை அனுபவிக்கிறார் – தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி -அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார் ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் -என்றுமாம் – இடையனாய் ஜாதிக்கு உசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இரங்கப் பண்ணி என் நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஸ்ரீ ஈஸ்வரன் உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க- தம்மை விஷயீ கரித்த ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் -குடக் கூத்தாடுகை முதலான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் – 98
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,
உண்ட துலகேழு முள்ளொடுங்க, – கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை.
கோவலன் ஆய், Kovalana Aay - இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி, Kudam Kondu Aadi - குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி, En Nenjam Mevi - என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை, Idam Aaga Konda Irai - (எனது நெஞ்சையெ) நித்யவாஸஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க, Kondhu Valarkka - சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படியான
குழவி ஆய், Kuzhavi Aay - சிறுகுழந்தையாய்
தான் வளர்ந்தது, Thaan Valarnthathu - தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச்சிறிய பருவத்திலே
உலகு ஏழும், Ulaku Ezhum - ஸப்தலோகங்களும்
உள் ஓடுங்க, Ul Oadunga - தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!, Undhadhu - உட்கொண்டது (என்ன ஆச்சரியம்)