| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2279 | இரண்டாம் திருவந்தாதி || தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதா நங்களை அனுபவிக்கிறார் – தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி -அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார் ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் -என்றுமாம் – இடையனாய் ஜாதிக்கு உசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இரங்கப் பண்ணி என் நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஸ்ரீ ஈஸ்வரன் உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க- தம்மை விஷயீ கரித்த ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் -குடக் கூத்தாடுகை முதலான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் – 98 | கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது, உண்ட துலகேழு முள்ளொடுங்க, – கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம் இடமாகக் கொண்ட இறை. | கோவலன் ஆய், Kovalana Aay - இடையனாய் வந்து பிறந்து குடம் கொண்டு ஆடி, Kudam Kondu Aadi - குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர) என் நெஞசம் மேவி, En Nenjam Mevi - என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி இடம் ஆக கொண்ட இறை, Idam Aaga Konda Irai - (எனது நெஞ்சையெ) நித்யவாஸஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி கொண்டு வளர்க்க, Kondhu Valarkka - சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படியான குழவி ஆய், Kuzhavi Aay - சிறுகுழந்தையாய் தான் வளர்ந்தது, Thaan Valarnthathu - தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச்சிறிய பருவத்திலே உலகு ஏழும், Ulaku Ezhum - ஸப்தலோகங்களும் உள் ஓடுங்க, Ul Oadunga - தன்னுள்ளே ஒடுங்கும்படி உண்டது!, Undhadhu - உட்கொண்டது (என்ன ஆச்சரியம்) |