திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2280 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2280இரண்டாம் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியைச் சொல்லுகிறார் – ஆஸ்ரித அர்த்தமாக சுருக்கின வடிவை உடையவனாய் மகாபலி பக்கலிலே மண் கொண்ட வ்யாமுக்தன்- பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியை அருளிச் செய்கிறார் – 99
இறையெம் பெருமான் அருளென்று, இமையோர் முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, – அறைகழல சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய் மாவடிவில் மண்கொண்டான் மால்.
பதவுரை Show / Hide
இமையோர், Imaiyor - (பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான், Emperumaan - ‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை, Irai - கொஞ்சம்
அருள் என்று, Arul Endru - கிருபைபண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று, Murai Nindru - அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள், Moyi Malargal - அழகிய புஷ்பங்களை
தூவ, Thuva - பணிமாறும்படியாக,
அறை கழல சே அடியான், Arai Kazhala Se Adiyaan - ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனும்
நெடியான், Nediyan - எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால், Maal - திருமால்
குறள் உரு ஆய், Kurall Uru Aay - (மாவலிபக்கல்) வாமநரூபியான் வந்து தோன்றி
மா வடிவின், Maa Vadivin - பெரிய வடிவினாலே
மண் கொண்டான், Man Kondaaan - பூமியை அளந்து கொண்டான்.