| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2280 | இரண்டாம் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியைச் சொல்லுகிறார் – ஆஸ்ரித அர்த்தமாக சுருக்கின வடிவை உடையவனாய் மகாபலி பக்கலிலே மண் கொண்ட வ்யாமுக்தன்- பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியை அருளிச் செய்கிறார் – 99 | இறையெம் பெருமான் அருளென்று, இமையோர் முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, – அறைகழல சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய் மாவடிவில் மண்கொண்டான் மால். | இமையோர், Imaiyor - (பிரமன் முதலான) தேவர்கள் எம்பெருமான், Emperumaan - ‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்) இறை, Irai - கொஞ்சம் அருள் என்று, Arul Endru - கிருபைபண்ண வேணும் என்று சொல்லி முறை நின்று, Murai Nindru - அடிமைக்கு ஏற்ப நின்று மொய் மலர்கள், Moyi Malargal - அழகிய புஷ்பங்களை தூவ, Thuva - பணிமாறும்படியாக, அறை கழல சே அடியான், Arai Kazhala Se Adiyaan - ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய திருவடிகளை யுடையவனும் செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனும் நெடியான், Nediyan - எல்லாரிலும் மேம்பட்டவனுமான மால், Maal - திருமால் குறள் உரு ஆய், Kurall Uru Aay - (மாவலிபக்கல்) வாமநரூபியான் வந்து தோன்றி மா வடிவின், Maa Vadivin - பெரிய வடிவினாலே மண் கொண்டான், Man Kondaaan - பூமியை அளந்து கொண்டான். |