Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2281 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2281இரண்டாம் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்- என் ஆஸ்ரயத்தின் அளவன்று உன் பக்கல் ச்நேஹம்-இத்தை யகஞ்சுரிப் படுத்த வேணும் பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன – கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் – 100
மாலே! நெடியோனே! கண்ணனே, விண்ணவர்க்கு
மேலா! வியந்துழாய்க் கண்ணியனே, – மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு .
மாலே, Maale - (அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே, Nediyone - ஸர்வஸ்மாத்பரனே!
கண்ணனே, Kannane - ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா, Vinnavarkku Meela - நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே, Viyan Thuzhai Kanniyaane - அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால், Melaal - முன்னொரு காலத்தில்
விளவின்காய், Vilavinkai - விளங்காயை
கன்றினால், Kanrinhaal - ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே, Veelthavane - உதிர்த்துத்தள்ளினவனே!,
யான் உடை, Yaan Udai - (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு, Anbu - அன்பானது
என்தன் அளவு அன்று, Enthan Alavu Andru - என்னளவில்அடங்கி நிற்பதன்று.