| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2281 | இரண்டாம் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்- என் ஆஸ்ரயத்தின் அளவன்று உன் பக்கல் ச்நேஹம்-இத்தை யகஞ்சுரிப் படுத்த வேணும் பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன – கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் – 100 | மாலே! நெடியோனே! கண்ணனே, விண்ணவர்க்கு மேலா! வியந்துழாய்க் கண்ணியனே, – மேலால் விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன் அளவன்றால் யானுடைய அன்பு . | மாலே, Maale - (அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே! நெடியோனே, Nediyone - ஸர்வஸ்மாத்பரனே! கண்ணனே, Kannane - ஸ்ரீக்ருஷ்ணனே! விண்ணவர்க்கு மேலா, Vinnavarkku Meela - நித்யஸூரிகளுக்குத் தலைவனே! வியன் துழாய் கண்ணியனே, Viyan Thuzhai Kanniyaane - அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே! மேலால், Melaal - முன்னொரு காலத்தில் விளவின்காய், Vilavinkai - விளங்காயை கன்றினால், Kanrinhaal - ஒரு கன்றைக் கொண்டு வீழ்த்தவனே, Veelthavane - உதிர்த்துத்தள்ளினவனே!, யான் உடை, Yaan Udai - (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற அன்பு, Anbu - அன்பானது என்தன் அளவு அன்று, Enthan Alavu Andru - என்னளவில்அடங்கி நிற்பதன்று. |