| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2382 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க அதுக்கு களை பிடுங்குகிறார் – ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி – அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் – ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே– தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும் தானே காட்டவும் -ஸ்ரீ மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் – ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும் வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் – சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும் அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான ஸ்ரீ எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்- ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன் இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் – 1 | நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், – யான்முகமாய் அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை, சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து. | நாராயணன்,Naarayanan - பரமபுருஷனானவன் நான்முகனை,Naanmughanai - பிரமனை படைத்தான்,Padaiththaan - ஸ்ருஷ்டித்தான் நான்முகனும்,Naanmughanum - அந்தப் பரமனும் தான்,Thaan - தானே முகம் ஆய்,Mugam Aay - முக்கியனாயிருந்து சங்கரனை,Sankaranai - சிவனை படைத்தான்,Padaiththaan - ஸ்ருஷ்டித்தான் ஆழ்பொருளை,Aazhporaulai - (ஆகவே, முழுமுதற் கடவுள் ஸ்ரீமந்நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை யான்,Yaan - அடியேன் முகம் ஆய்,Mugam Aay - முக்கியமாக அந்தாதி மேல் இட்டு,Andhaadhi Mel Ittu - இத்திருவந்தாதி மூலமாக அறிவித்தேன்,Ariviththen - உங்கட்கு அறிவிக்கத்தொடங்குகின்றேன் நீர்,Neer - நீங்கள் தேர்ந்து,Therndhu - ஆராய்ந்து சிந்தாமல் கொள்மின்,Sindhamal Kolmin - (இவ்வர்த்தத்தைக் குறையற நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள். |