| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2384 | நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும் முட்டக் காண வல்லார் இல்லை -நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்- அபேஷிப்பார் இன்றிக்கே இருக்க ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளிற்றும் – அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி-ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது- 3 | பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும், ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், – ஞாலத் தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில் அருபொருளை யானறிந்த வாறு? | பாலில்,Palil - திருப்பாற்கடலில் (- (எம்பெருமான்)) கிடந்ததுவும்,Kidandathuvum - சயனித்தருளு மழகையும் அரங்கம்,Arangam - திருவரங்கம் பெரிய கோயிலில் மேயதுவும்,Meyathuvum - பொருந்தி வாழ்வதையும் பண்டு,Pandhu - முன்பொருகால் ஆலில்,Aalil - ஆலந்தளிரில் துயின்றதுவும்,Thuyindrathuvum - பள்ளிகொண்ட விதத்தையும் ஆர் அறிவார்,Ar Arivaar - யார் அறியவல்லார்? ஞாலத்து ஒரு பொருளை,Naalathu Oru Porulai - இப்பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும் வானவர்தம் மெய்பொருளை,Vaanavardham Meiporulai - நித்யஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும் அப்பில் அரு பொருளை,Appil Aru Porulai - (ஸலகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜலதத்வத்தினுள் கண்வளரும் அரும்பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை யான் அறிந்த ஆறு,Yaan Arindha Aaru - அடியேன் அறிந்த விதம் என்ன! |