Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2384 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2384நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும் முட்டக் காண வல்லார் இல்லை -நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்- அபேஷிப்பார் இன்றிக்கே இருக்க ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளிற்றும் – அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி-ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது- 3
பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், – ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?
பாலில்,Palil - திருப்பாற்கடலில் (- (எம்பெருமான்))
கிடந்ததுவும்,Kidandathuvum - சயனித்தருளு மழகையும்
அரங்கம்,Arangam - திருவரங்கம் பெரிய கோயிலில்
மேயதுவும்,Meyathuvum - பொருந்தி வாழ்வதையும்
பண்டு,Pandhu - முன்பொருகால்
ஆலில்,Aalil - ஆலந்தளிரில்
துயின்றதுவும்,Thuyindrathuvum - பள்ளிகொண்ட விதத்தையும்
ஆர் அறிவார்,Ar Arivaar - யார் அறியவல்லார்?
ஞாலத்து ஒரு பொருளை,Naalathu Oru Porulai - இப்பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும்
வானவர்தம் மெய்பொருளை,Vaanavardham Meiporulai - நித்யஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும்
அப்பில் அரு பொருளை,Appil Aru Porulai - (ஸலகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜலதத்வத்தினுள் கண்வளரும் அரும்பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை
யான் அறிந்த ஆறு,Yaan Arindha Aaru - அடியேன் அறிந்த விதம் என்ன!