| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2385 | நான்முகன் திருவந்தாதி || சர்வேஸ்வரனோடு ஒக்க வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று ருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் – பிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன் – என்று –தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் – 4 | ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும், கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, – வேறொருவர் இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து. | ஆறு,Aaru - கங்காநதியை சடை,Sadai - தனது ஜடா மண்டலத்திலே கரந்தான்,Karandhaan - மறையச்செய்து தாங்கிக்கொண்டிருக்கின்ற ருத்ரன் அண்டர் கொன் தன்னோடும்,Andar Kon Thannodum - தெவாதிதெவனான ஸர்வேச்வானோடு கூறு உடையன் என்பதுவும்,Koora Udaiyan Enbathuvum - ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ் சொல் கொள்கைத்தே,Kolgaithae - அங்கீகரிக்கத் தகுந்த்தோ? (அல்ல) வேறு ஒருவர் இல்லாமை நின்றானை,Veeru Oruvar Illamai Nindraanai - வேறொரு தெய்வமும் தனக்கு ஒப்பாக இல்லாமல் வீறுபெற்றிருப்பவனும் எப்பொருட்கும் சொல்லானை,Epporutkum Sollaanai - எந்தப்பொருளைச் சொல்லுகிற சப்தமும் தனக்கு வாசகமாம்படி (ஸாவ சப்தவாச்யனாய்) உள்ளவனுமான எம்மானை,Emmaanai - எம்பெருமானை தொகுத்து சொன்னேன்,Thoguthu Sonnaen - சுருங்கப் பேசினே னித்தனை. |