Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2385 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2385நான்முகன் திருவந்தாதி || சர்வேஸ்வரனோடு ஒக்க வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று ருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் – பிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன் – என்று –தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் – 4
ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, – வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து.
ஆறு,Aaru - கங்காநதியை
சடை,Sadai - தனது ஜடா மண்டலத்திலே
கரந்தான்,Karandhaan - மறையச்செய்து தாங்கிக்கொண்டிருக்கின்ற ருத்ரன்
அண்டர் கொன் தன்னோடும்,Andar Kon Thannodum - தெவாதிதெவனான ஸர்வேச்வானோடு
கூறு உடையன் என்பதுவும்,Koora Udaiyan Enbathuvum - ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ் சொல்
கொள்கைத்தே,Kolgaithae - அங்கீகரிக்கத் தகுந்த்தோ? (அல்ல)
வேறு ஒருவர் இல்லாமை நின்றானை,Veeru Oruvar Illamai Nindraanai - வேறொரு தெய்வமும் தனக்கு ஒப்பாக இல்லாமல் வீறுபெற்றிருப்பவனும்
எப்பொருட்கும் சொல்லானை,Epporutkum Sollaanai - எந்தப்பொருளைச் சொல்லுகிற சப்தமும் தனக்கு வாசகமாம்படி (ஸாவ சப்தவாச்யனாய்) உள்ளவனுமான
எம்மானை,Emmaanai - எம்பெருமானை
தொகுத்து சொன்னேன்,Thoguthu Sonnaen - சுருங்கப் பேசினே னித்தனை.