| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2386 | நான்முகன் திருவந்தாதி || நானே ஈஸ்வரன் என்னும் இடம் நீர் அறிந்தபடி எங்கனே என்று ஸ்ரீ எம்பெருமான் அருளிச் செய்ய- இத்தை யுபசம்ஹரித்த நீ இங்கே வந்து திருவவதாரம் பண்ணி ரஷகன் ஆகையாலே -என்கிறார் – எனக்கு சர்வமும் பிரகாரம் ஆகில் இறே நீர் சொல்லுகிறபடி கூடுவது என்று ஸ்ரீ எம்பெருமான் அருளிச் செய்ய- ஜகத்து அவனுக்கு பிரகாரம் என்னும் இடத்துக்கு உறுப்பாக-உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே- சகல ஆத்மாக்களுக்கும் உபாதான காரணம் ஆகையாலே சர்வமும் உனக்குப் பிரகாரம் என்கிறார் -என்றுமாம் – அந்தராத்மதயா பிரகாசித்து நின்ற -இவ் வர்த்தம் வேறு ஒருவர் அறிவார் இல்லை – தேவரே அறிந்து அருள வேணும் என்கை- 5 | தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம், வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, – உகத்தில் ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே, அருநான்கு மானாய் அறி. | தொகுத வரத்தன் ஆய்,Thogutha Varaththan Aayi - (தவஞ்செய்து) ஸம்பாதிக்கப் பட்ட வரங்களை யுடையனாய் தோலாதான்,Tholaadhaan - ஒருவரிடத்திலும் தோல்வியடையாதவனாயிருந்த இரணியனுடைய மார்வம்,Maarvam - மார்பை வகிர்த்த,Vagirtta - இருபிளவாகப் பிளந்தொழித்த வளை உகிர்,Valai Ughir - வளைந்த நகங்களைக் கொண்ட தோள்,Thol - திருக்கைகளை யுடைய மாலே,Maale - ஸர்வேச்வரனே!, நீ,Nee - நீ, உகத்தில்,Ughathil - பிரளயகாலத்தில் உள் வாங்கி,Ul Vaangi - (உலகங்களை யெல்லாம்) உபஸம்ஹரித்து உள்ளேயிட்டு வைத்து ஒரு நான்று,Oru Naandru - (மீண்டும் ஸ்ருஷ்டி காலமாகிற) ஒரு மையத்தில் உயர்த்தி,Uyarththi - (அவ்வுலகங்களை யெல்லாம்) வெளியிட்டு வளரச்செய்து நீயே,Neeye - இப்படிப்பட்ட நீயே நான்கும்,Naankum - (தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால்வகைப் பொருள்களிலும் அரு ஆனாய்,Aru Aanai - அந்தராத்மாவானாய் அறி,Ari - இதனை அறிவாயாக. |