| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2387 | நான்முகன் திருவந்தாதி || வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன -பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார் இப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார் –என்றுமாம்- 6 | அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர், சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார் ஈனவரே யாதலால் இன்று. | சமணர்,Samanar - ஜைநர்கள் அறியார்,Ariyar - உண்மையை அறிய மாட்டார்கள் பவுத்தர,Pavuththara - பௌத்தர்கள் அயர்த்தார்,Ayarththaar - பிரமித்தார்கள் சிவப்பட்டார்,Sivappattaar - சைவமதஸ்தர்கள் சிறியார்,Siriyaar - மிகவும் நீசராகி யொழிந்தனர் செப்பில்,Cheppil - இவர்களுடைய தன்மைகளைச் சொல்லப் புகுந்தால், வெறி ஆய,Veri Aaya - பரிமளமே வடி வெடுத்தது போன்றுள்ளவனும் மாயவனை,Maayavanai - ஆச்சரியமான குண சேஷ்டிதங்ளை யுடையவனும் மால் அவனை,Maal Avanai - (அடியார் திறத்தில்) வியாமோஹ முள்ளவனும் மாதவனை,Maadhavanai - திருமகள் கொழுநனுமான எம்பெருமானை எத்தாதார்,Eththaathaar - (இவர்கள்) துதிக்க மாட்டாதவர்களா யிரா நின்றார்கள், ஆதலால்,Aadhalal - ஆகையினாலே இன்று,Indru - இப்போது ஈனவரே,Eenavare - (இவர்கள்) நீசர்களே யாவர். |