Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2387 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2387நான்முகன் திருவந்தாதி || வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன -பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார் இப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார் –என்றுமாம்- 6
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,
சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்
ஈனவரே யாதலால் இன்று.
சமணர்,Samanar - ஜைநர்கள்
அறியார்,Ariyar - உண்மையை அறிய மாட்டார்கள்
பவுத்தர,Pavuththara - பௌத்தர்கள்
அயர்த்தார்,Ayarththaar - பிரமித்தார்கள்
சிவப்பட்டார்,Sivappattaar - சைவமதஸ்தர்கள்
சிறியார்,Siriyaar - மிகவும் நீசராகி யொழிந்தனர்
செப்பில்,Cheppil - இவர்களுடைய தன்மைகளைச் சொல்லப் புகுந்தால்,
வெறி ஆய,Veri Aaya - பரிமளமே வடி வெடுத்தது போன்றுள்ளவனும்
மாயவனை,Maayavanai - ஆச்சரியமான குண சேஷ்டிதங்ளை யுடையவனும்
மால் அவனை,Maal Avanai - (அடியார் திறத்தில்) வியாமோஹ முள்ளவனும்
மாதவனை,Maadhavanai - திருமகள் கொழுநனுமான எம்பெருமானை
எத்தாதார்,Eththaathaar - (இவர்கள்) துதிக்க மாட்டாதவர்களா யிரா நின்றார்கள்,
ஆதலால்,Aadhalal - ஆகையினாலே
இன்று,Indru - இப்போது
ஈனவரே,Eenavare - (இவர்கள்) நீசர்களே யாவர்.