திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2388 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2388நான்முகன் திருவந்தாதி || அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க- நீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் – பூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை – உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது – 7
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும் நின்றாக நின்னருளென் பாலதே, – நன்றாக நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே நீயென்னை யன்றி யிலை.
பதவுரை Show / Hide
நாரணனே,Naaranane - நாராயணனே!,
இன்று ஆக,Indru Aaga - இனறைக்காகவுமாம்
நாளையே ஆக,Naalaiye Aaga - நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக,Ini Siridhu Nindru Aaga - இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள்,Nin Arul - உன்னுடைய கிருபை
என் பாலதே,En Palathe - என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக,Nandru Aaga - நிச்சயமாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்,Naan Unnai Andri Ileen Kandaai - நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்
நீ,Nee - நீயும்
என்னை அன்றி இலை,Ennai Andri Ilai - என்னையொழிய வேறொரு நகஷ்யனை உடையை யல்லைகாண்.