| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2389 | நான்முகன் திருவந்தாதி || நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் – உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்– வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் – 8 | இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற சிலைகொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த கூரம்பன் அல்லால் குறை. | என் நெஞ்சை,En Nenjai - எனது மனமே! ஈசனை வென்ற,Eesanai Vendra - ருத்ரனை ஜயித்த சிலைகொண்ட,Silaikonda - வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட செம் கண் மால்,Sem Kan Maal - புண்டரீ காக்ஷனாகிய தன்னை சேரா,Sera - பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த குலை கொண்ட ஈரைந் தலையான்,Kulai Konda Eirain Thalaiyaan - கொத்துப்போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய இலங்கையை,Ilankaiyai - லங்காபுரியை ஈடு அழித்த,Eedu Azhitha - சீர்கெடுத்த கூர் அம்பன் அல்லால்,Koora Amban Allaal - கூர்மைதாங்கிய அம்புகளையுடையவனான இராமபிரானைத் தவிர்த்து குறை,Kurai - விரும்பத்தகுந்த மற்ற துணை,Mattra Thunai - வேறொரு துணைவன் இலை,Ilai - நமக்கு இல்லை. |