Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2389 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2389நான்முகன் திருவந்தாதி || நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் – உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்– வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் – 8
இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
சிலைகொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த
கூரம்பன் அல்லால் குறை.
என் நெஞ்சை,En Nenjai - எனது மனமே!
ஈசனை வென்ற,Eesanai Vendra - ருத்ரனை ஜயித்த
சிலைகொண்ட,Silaikonda - வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்,Sem Kan Maal - புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா,Sera - பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்,Kulai Konda Eirain Thalaiyaan - கொத்துப்போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை,Ilankaiyai - லங்காபுரியை
ஈடு அழித்த,Eedu Azhitha - சீர்கெடுத்த
கூர் அம்பன் அல்லால்,Koora Amban Allaal - கூர்மைதாங்கிய அம்புகளையுடையவனான இராமபிரானைத் தவிர்த்து
குறை,Kurai - விரும்பத்தகுந்த
மற்ற துணை,Mattra Thunai - வேறொரு துணைவன்
இலை,Ilai - நமக்கு இல்லை.