| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2390 | நான்முகன் திருவந்தாதி || அவனைத் துணையாக வேண்டுவான் என்-ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஒருவர் ஆனாலோ என்னில் அவர்களும் ஸ்வ தந்த்ரரமாக ரஷகராக மாட்டார் –ஸ்ரீ எம்பெருமானுக்கு சேஷ பூதர் என்கிறார் – நாமே யன்றிக்கே ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்களுடைய ஆகிஞ்சன்யம் பற்றாசாக வாய்த்து ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிப்பது என்கிறார் -என்றுமாம் – வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு தம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் – 9 | குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, – கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு. | குறை கொண்டு,Kurai Konda - நைச்யா நுஸந்தானம் செய்துகொண்டு (- (பிரமதேவன்)) குண்டிகை நீர்,Kundikai Neer - கமண்டல தீர்த்தத்தை பெய்து,Peidhu - வார்த்து மறைகொண்ட,Maraikonda - வேதங்களிலுள்ள மந்திரத்தால்,Mandirathal - புருஷஸூக்தம் முதலிய மந்த்ரங்களினால் வாழ்த்தி,Vazhthi - மங்களாசாஸநம் பண்ணி ஆங்கு,Aangu - (எம்பெருமான் உலகளந்தருளின) அக்காலத்தில் அண்டத்தான்சே அடியை,Andaththaanse Adiyai - அந்த ஸர்வேச்வானுடைய திருவடிகளை கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற,Karai Konda Kandaththaan Chennim Mel Eera - விஷகண்டனான ருத்ரனுடைய தலையில் (ஸ்ரீபாத தீர்த்தம்) விழும்டியாக கழுவினான்,Kaluvinaan - விளக்கினான். |