Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2391 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2391நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம் ஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்- திரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தேன் என்றும்- ஜடை தரையிலே தாழும் படி சாதன அனுஷ்டானம் பண்ணினேன்-என்றும் ஸ்வ சக்தியில் குறைய நினையாத-ப்ரஹ்ம ருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே- 10
ஆங்கார வாரம் அது கேட்டு, அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி, – யாங்காண
வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து.
ஆங்கு,Aangu - பரமபதத்திலே (- (அஸுரர்கள் இங்கும் வந்து ஆரவாரம் செய்வதாக ப்ரமித்து) (நாம் ஸமர்த்தரேயாவோம்))
ஆரவாரம் அது கேட்டு,Aaravaram Athu Kettu - (நித்ய முக்தர்களுடைய) ஸாமகான கோஷத்தைக் கேட்டு
அழல் உமிழும்,Azhala Umizhume - விஷாக்நியைக் கக்குகின்ற
காண,Kaan - ஸேவிப்பதற்கு
வல்லம் அல்லமே,Vallam Allame - ஸாமர்த்திய முடையோ மல்லோமோ?
மா மலரான்,Maa Malaraan - சிறந்த பூவிற் பிறந்த பிரமனும்
பூகார் அரவு அணையான்,Pookaar Aravu Anaiyaan - அழகிய சீற்றத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
பொன் மேனி,Pon Meeni - அழகிய திருமேனியை
யாம்,Yaam - அநந்யபக்தரான நாம்
வார் சடையான்,Vaar Sadayaan - நீண்ட ஜடையை யுடையருத்ரனும்
வாழ்த்து,Vazhthu - (எம்பெருமானை) வாழ்த்துவதில்
வல்லர் அல்லரே,Vallar Allare - அஸமர்த்தர்களே.