| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2391 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம் ஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்- திரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தேன் என்றும்- ஜடை தரையிலே தாழும் படி சாதன அனுஷ்டானம் பண்ணினேன்-என்றும் ஸ்வ சக்தியில் குறைய நினையாத-ப்ரஹ்ம ருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே- 10 | ஆங்கார வாரம் அது கேட்டு, அழலுமிழும் பூங்கார் அரவணையான் பொன்மேனி, – யாங்காண வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான் வல்லரே யல்லரே வாழ்த்து. | ஆங்கு,Aangu - பரமபதத்திலே (- (அஸுரர்கள் இங்கும் வந்து ஆரவாரம் செய்வதாக ப்ரமித்து) (நாம் ஸமர்த்தரேயாவோம்)) ஆரவாரம் அது கேட்டு,Aaravaram Athu Kettu - (நித்ய முக்தர்களுடைய) ஸாமகான கோஷத்தைக் கேட்டு அழல் உமிழும்,Azhala Umizhume - விஷாக்நியைக் கக்குகின்ற காண,Kaan - ஸேவிப்பதற்கு வல்லம் அல்லமே,Vallam Allame - ஸாமர்த்திய முடையோ மல்லோமோ? மா மலரான்,Maa Malaraan - சிறந்த பூவிற் பிறந்த பிரமனும் பூகார் அரவு அணையான்,Pookaar Aravu Anaiyaan - அழகிய சீற்றத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது பொன் மேனி,Pon Meeni - அழகிய திருமேனியை யாம்,Yaam - அநந்யபக்தரான நாம் வார் சடையான்,Vaar Sadayaan - நீண்ட ஜடையை யுடையருத்ரனும் வாழ்த்து,Vazhthu - (எம்பெருமானை) வாழ்த்துவதில் வல்லர் அல்லரே,Vallar Allare - அஸமர்த்தர்களே. |