திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2392 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2392நான்முகன் திருவந்தாதி || ஆனபின்பு எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்- வணங்குவித்துக் கொள்ளுகைக்கு லஷணம் சொல்லுகிறது – சூழப் பட்ட திருத் துழாய் வர்த்தியா நின்று-ஆதிராஜ்ய சூசகமான முடியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருநாமத்தை மாறாமல் நினைத்து-உதாரமான கையைக் கூப்பி-மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் புஷ்பயாதி உபகரணங்களைக் கொண்டு அவன் திருவடிகளிலே-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குங்கோள்- 11
வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம் தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், – சூழ்த்த துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை வழாவண்கை கூப்பி மதித்து.
பதவுரை Show / Hide
சூழ்ந்த,Sozhndha - நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட
துழாய்,Thuzhai - திருத்துழாய்மாலை
மன்னு,Mannu - பொருந்தியிருக்கப் பெற்ற
நீள் முடி,Neel Mudi - நீண்ட திருவபிஷேகத்தை யுடையனும்
என் தொல்லைமால் தன்னை,En Thollaimaal Thannai - என்னிடத்தில் நெடுநாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேச்வரனை
வழா,Vazha - ஒரு நொடிப்பொழுதும் விடாமல்
வண் கை கூப்பி மதித்து,Van Kai Koopi Mathithu - அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி
மகுடம் தாழ்த்தி,Makkutam Thazhdthi - தலையை வணக்கி
தண் மலரால்,Than Malaraal - குளிர்ந்த புஷ்பங்களைக்கொண்டு
வணங்கு மின்கள்,Vanangu Mingkal - ஆச்ரயியுங்கள்,
வாய்,Vaai - (உங்களுடைய) வாய்
வாழ்த்துக,Vaazhththuka - (அவனைத்) துதிக்கட்டும்,
கண்,Kan - கண்கள்
காண்க,Kaannga - (அவனையே) ஸேவிக்கட்டும்
செவி,Sevi - காதுகள்
கேட்க,Kedhka - (அவனது சரிதங்களையே) கேட்கட்டும்.