| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2392 | நான்முகன் திருவந்தாதி || ஆனபின்பு எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்- வணங்குவித்துக் கொள்ளுகைக்கு லஷணம் சொல்லுகிறது – சூழப் பட்ட திருத் துழாய் வர்த்தியா நின்று-ஆதிராஜ்ய சூசகமான முடியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருநாமத்தை மாறாமல் நினைத்து-உதாரமான கையைக் கூப்பி-மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் புஷ்பயாதி உபகரணங்களைக் கொண்டு அவன் திருவடிகளிலே-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குங்கோள்- 11 | வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம் தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், – சூழ்த்த துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை வழாவண்கை கூப்பி மதித்து. | சூழ்ந்த,Sozhndha - நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட துழாய்,Thuzhai - திருத்துழாய்மாலை மன்னு,Mannu - பொருந்தியிருக்கப் பெற்ற நீள் முடி,Neel Mudi - நீண்ட திருவபிஷேகத்தை யுடையனும் என் தொல்லைமால் தன்னை,En Thollaimaal Thannai - என்னிடத்தில் நெடுநாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேச்வரனை வழா,Vazha - ஒரு நொடிப்பொழுதும் விடாமல் வண் கை கூப்பி மதித்து,Van Kai Koopi Mathithu - அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி மகுடம் தாழ்த்தி,Makkutam Thazhdthi - தலையை வணக்கி தண் மலரால்,Than Malaraal - குளிர்ந்த புஷ்பங்களைக்கொண்டு வணங்கு மின்கள்,Vanangu Mingkal - ஆச்ரயியுங்கள், வாய்,Vaai - (உங்களுடைய) வாய் வாழ்த்துக,Vaazhththuka - (அவனைத்) துதிக்கட்டும், கண்,Kan - கண்கள் காண்க,Kaannga - (அவனையே) ஸேவிக்கட்டும் செவி,Sevi - காதுகள் கேட்க,Kedhka - (அவனது சரிதங்களையே) கேட்கட்டும். |