| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2393 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன நீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-ஆஸ்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் – வேதத்தாலும் எங்கும் புக்கு-உன்னை உணராதவர்கள் அதபதிக்கும்படியாக மதித்தாய் – 12 | மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ மதித்தாய் மதிகோள் விடுத்தாய், – மதித் தாய் மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு. | மதியார்,Mathiyaar - உன்னைச் சிந்தியாதவர்கள் நான்கில்,Naankil - நால்வகைப்பட்ட யோனிகளில் போய் போய் வீழ,Poi Poi Veezha - சென்று சென்று பலகாலும் விழும்படியாக மதித்தாய்,Mathiththai - ஸங்கல்பித்தாய், மதி,Mathi - சந்திரனுடைய கோள்,Kol - துன்பத்தை விடுத்தாய்,Viduththai - போக்கியருளினாய் மடு,Madu - ஒரு மடுவிலே கிடந்த,Kidandha - (சாபத்தினால்) வந்து சேர்ந்திருந்த மா முதலை,Maa Muthalai - பெரிய முதலையினாலுண்டான கோள்,Kol - (கஜேந்திராழ்வானது) துயரத்தை விடுப்பான்,Viduppaan - நீக்குவதற்காக ஆழி,Aazhi - திருவாழியை விடற்கு,Vidarku - (அந்த முதலையின் மேல்) பிரயோகிப்பதற்கு மதித்தாய்,Mathiththai - நினைத்தருளினாய் இரண்டும்,Irandum - முதலையும் கஜேந்திராழ்வானு மாகிற இரண்டும் போய்,Poi - ஒன்றையொன்று விட்டுப்போய் இரண்டின்,Irandin - அவ்விரண்டு ஜந்துக்களுக்கும் வீடு,Veedu - சாபமோக்ஷமும் மோக்ஷஸாம் ராஜ்யமும் உண்டாம்படி மதித்தாய்,Mathiththai - ஸங்கல்பித்தாய். |