திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2393 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2393நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன நீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-ஆஸ்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் – வேதத்தாலும் எங்கும் புக்கு-உன்னை உணராதவர்கள் அதபதிக்கும்படியாக மதித்தாய் – 12
மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ மதித்தாய் மதிகோள் விடுத்தாய், – மதித் தாய் மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு.
பதவுரை Show / Hide
மதியார்,Mathiyaar - உன்னைச் சிந்தியாதவர்கள்
நான்கில்,Naankil - நால்வகைப்பட்ட யோனிகளில்
போய் போய் வீழ,Poi Poi Veezha - சென்று சென்று பலகாலும் விழும்படியாக
மதித்தாய்,Mathiththai - ஸங்கல்பித்தாய்,
மதி,Mathi - சந்திரனுடைய
கோள்,Kol - துன்பத்தை
விடுத்தாய்,Viduththai - போக்கியருளினாய்
மடு,Madu - ஒரு மடுவிலே
கிடந்த,Kidandha - (சாபத்தினால்) வந்து சேர்ந்திருந்த
மா முதலை,Maa Muthalai - பெரிய முதலையினாலுண்டான
கோள்,Kol - (கஜேந்திராழ்வானது) துயரத்தை
விடுப்பான்,Viduppaan - நீக்குவதற்காக
ஆழி,Aazhi - திருவாழியை
விடற்கு,Vidarku - (அந்த முதலையின் மேல்) பிரயோகிப்பதற்கு
மதித்தாய்,Mathiththai - நினைத்தருளினாய்
இரண்டும்,Irandum - முதலையும் கஜேந்திராழ்வானு மாகிற இரண்டும்
போய்,Poi - ஒன்றையொன்று விட்டுப்போய்
இரண்டின்,Irandin - அவ்விரண்டு ஜந்துக்களுக்கும்
வீடு,Veedu - சாபமோக்ஷமும் மோக்ஷஸாம் ராஜ்யமும் உண்டாம்படி
மதித்தாய்,Mathiththai - ஸங்கல்பித்தாய்.