Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2394 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2394நான்முகன் திருவந்தாதி || மோஷ யுபாயத்தை அறியாதே சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள் ஸ்ரீ எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் – 13
வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்
கூடாக்கு நின்றுண்டு கொண்டுழல்வீர், – வீடாக்கும்
மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா யணன்.
வீடு ஆக்கும் பெற்றி அறியாது,Veedu Aakkum Pettri Ariyadhu - மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்
மெய்,Mei - சரீரத்தை
வருத்தி,Varuththi - (உபவாஸாதிகளாலே) க்லேசப்படுத்தி
கூடு ஆக்கி,Koodu Aakki - எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி
நின்று,Ninru - இப்படி நெடுங்காலம் தவம்புரிந்தும்
உண்டு கொண்டு,Undu Kondu - (தேஹம் தரிக்க வேண்டுமளவு ஸ்வல்மாக) புஜித்தும்
உழல்வீர்,Uzhalveer - திரிகின்றவர்களே!
வீடு ஆக்கும்,Veedu Aakkum - மோக்ஷத்தைத் தரக்கூடிய
மெய் பொருள்தான்,Mei Porulthaan - மெய்யான உபாயமானயிருப்பவனும்
வேதம் முதல் பொருள்தான்,Vedham Muthal Porulthaan - வேதங்களினால் முழு முதற்கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும்
விண்ணவர்க்கு,Vinnavarkku - நித்யஸூரிகளுக்கு
நல் பொருள்தான்,Nal Porulthaan - போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
நாராயணன்,Naarayanan - ஸ்ரீமந்நாராயணனே யாவன்.