| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2395 | நான்முகன் திருவந்தாதி || இப்படி இராதார் உண்டோ என்னில்-ஹேயரான சமய வாதிகள் சொல்லுவதைக் கேட்டு அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் – பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார் 14 | நாரா யணனென்னை யாளி, நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்தன் – பேரான பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு ஆசைப்பட் டாழ்வார் பலர். | நாராயணன்,Naarayanan - நாராயணனென்றுந் திருநாம முடையவனும் என்னை ஆளி,Ennai Aali - (விசேஷித்து) அடியேனை ஆட்கொள்பவனும் நாகத்து சேராமல் காக்கும்,Nagathu Seramal Kaakkum - (அடியார்களை) நாகம்போக வொட்டாமல் காத்தருள்பவனுமான திருமால் தன்,Thirumaal Than - திருமாலினது பேர் ஆன,Per Aan - திருநாமங்களாயுள்ளவற்றை பேச பெறாத,Pesa Peradha - ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கியமற்றவர்களான பிணம்,Pinam - ஜீவச்சவ மென்னலாம்படியுள்ள பாஹ்யகுத்தருஷ்டி மதஸ்தர்கள் பேச,Pesa - (அபார்த்தங்களைப்) பிதற்ற கேட்டு,Kettu - அவற்றைக்கேட்டு பலர்,Palaar - பலபேர்கள் ஆசைப்பட்டு,Aasai Pattu - தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாயொழிய விரும்பி ஆழ்வார்,Aalvaar - அகோகதியை யடைந்தொழிவர் |