திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2395 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2395நான்முகன் திருவந்தாதி || இப்படி இராதார் உண்டோ என்னில்-ஹேயரான சமய வாதிகள் சொல்லுவதைக் கேட்டு அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் – பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார் 14
நாரா யணனென்னை யாளி, நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்தன் – பேரான பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு ஆசைப்பட் டாழ்வார் பலர்.
பதவுரை Show / Hide
நாராயணன்,Naarayanan - நாராயணனென்றுந் திருநாம முடையவனும்
என்னை ஆளி,Ennai Aali - (விசேஷித்து) அடியேனை ஆட்கொள்பவனும்
நாகத்து சேராமல் காக்கும்,Nagathu Seramal Kaakkum - (அடியார்களை) நாகம்போக வொட்டாமல் காத்தருள்பவனுமான
திருமால் தன்,Thirumaal Than - திருமாலினது
பேர் ஆன,Per Aan - திருநாமங்களாயுள்ளவற்றை
பேச பெறாத,Pesa Peradha - ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கியமற்றவர்களான
பிணம்,Pinam - ஜீவச்சவ மென்னலாம்படியுள்ள பாஹ்யகுத்தருஷ்டி மதஸ்தர்கள்
பேச,Pesa - (அபார்த்தங்களைப்) பிதற்ற
கேட்டு,Kettu - அவற்றைக்கேட்டு
பலர்,Palaar - பலபேர்கள்
ஆசைப்பட்டு,Aasai Pattu - தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாயொழிய விரும்பி
ஆழ்வார்,Aalvaar - அகோகதியை யடைந்தொழிவர்