Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2397 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2397நான்முகன் திருவந்தாதி || உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன – நான் ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷ பாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் -என்கிறார்- ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை நயாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப் பாட்டால் சொல்லுகிறது- 16
நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமேமாற் றாக, – பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய
தேராழி யால்மறைத்தா ரால்.
அந்நான்று,Annantru - பாரதயுத்தம் நடந்த அக்காலத்து (- (மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே))
தேவர் தலை மன்னர் தாமே,Thevar Thalai Mannar Thaame - தேவாதிதேவனான தானே
மாற்று ஆக,Maatru Aaga - எதிரியாயிருந்து கொண்டு
பல மன்னர்,Pala Mannar - பல அரசர்கள்
போர்,Por - யுத்தக்களத்தில்
மாள,Mala - மடிந்து
வெம் கதிரோன்,Vem Kadhiron - ஸூர்யன்
மாய,Maya - (அகாலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும்
பொழில் மறைய,Pozhil Maraiya - பூமண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும்
தேர் ஆழியால்,Ther Azhiyal - சக்கராயுதத்தினால்
என் நெஞ்சம்,En Nenjam - எனது (சஞ்சமான) மனமானது
நிலை மன்னும்,Nilai Mannum - சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது.