| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2397 | நான்முகன் திருவந்தாதி || உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன – நான் ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷ பாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் -என்கிறார்- ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை நயாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப் பாட்டால் சொல்லுகிறது- 16 | நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர் தலைமன்னர் தாமேமாற் றாக, – பலர்மன்னர் போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய தேராழி யால்மறைத்தா ரால். | அந்நான்று,Annantru - பாரதயுத்தம் நடந்த அக்காலத்து (- (மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே)) தேவர் தலை மன்னர் தாமே,Thevar Thalai Mannar Thaame - தேவாதிதேவனான தானே மாற்று ஆக,Maatru Aaga - எதிரியாயிருந்து கொண்டு பல மன்னர்,Pala Mannar - பல அரசர்கள் போர்,Por - யுத்தக்களத்தில் மாள,Mala - மடிந்து வெம் கதிரோன்,Vem Kadhiron - ஸூர்யன் மாய,Maya - (அகாலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும் பொழில் மறைய,Pozhil Maraiya - பூமண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும் தேர் ஆழியால்,Ther Azhiyal - சக்கராயுதத்தினால் என் நெஞ்சம்,En Nenjam - எனது (சஞ்சமான) மனமானது நிலை மன்னும்,Nilai Mannum - சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது. |